6
May, 2026

A News 365Times Venture

6
Wednesday
May, 2026

A News 365Times Venture

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' – கொளத்தூர் மணி வேதனை

Date:

திராவிடர் விடுதலை கழகம்  தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி நடைபெற்றது.

கொளத்தூர் மணி

அந்தப் பயிற்சிகளை திராவிட இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைத்தனர். காயமடைத்த புலிகளின் சிகிச்சைக்கான உதவி, ஆயுதம் அனுப்பியது வரை திராவிட இயக்கங்களின் பங்கு உள்ளது.

புலிகளுடன் இருந்ததை திராவிட இயக்கத்தினர் யாரும் விளம்பரபடுத்தவில்லை. சீமானுக்கு அரசியல் பொருளாதாரக் காரணமாக இருக்கலாம். பெரியார் என்ற திராவிட இயக்கத் தலைவருக்கு எதிராகப் பேசிக் கொண்டு இருப்பதால், அவருக்கு நாங்கள் எதிர் வினையாற்ற வேண்டியிருக்கிறது.

சீமான்

சீமான் ஏதோ மனநோய் வந்தவர்கள் போல பேசுகிறார். கரும்புலி என்று  சீமான் சொல்லியதை நம்பி  ஏமாந்து போனோம் என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னது உண்மைதான்.

அனுராதாபுரம் தாக்குதலில் யாரும் தப்பவில்லை என்று சந்தோஷ் சொன்னார். ஆனால் சீமான் நெருக்கமானவராக இருந்ததால், அவர் சொன்னதை நம்பி தொலைந்தோம். ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம். சீமான் பேசுவதை நம்பக் கூடியவர்களும் இருக்கின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு

அதனால் ஈரோட்டில் இவ்வளவு வாக்கு வாங்கி இருக்கிறேன் என்று சொல்வதற்காக சீமான் இப்படி பேசுகிறார். ஈரோடு தேர்தல் பிரசார மேடையில் யாராவது அடிக்க மாட்டார்களா, அதை வைத்து அரசியல் செய்து வாக்கு வாங்கலாம் எனப் பார்க்கிறார்.  நாங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബംഗാളില്‍ ബി.ജെ.പിയെ ജയിപ്പിച്ചത് എസ്.ഐ.ആര്‍

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാള്‍ മുഴുവനും കാവിപുതപ്പിക്കാന്‍ ബി.ജെ.പിക്ക് വഴിയൊരുക്കിയ ഏറ്റവും വലിയ...

முரண்டு பிடிக்கும் மம்தா; 'ராஜினாமா செய்ய வேண்டும் என்பது கட்டாயமா?' அரசியல் சாசனம் சொல்வது என்ன?

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இருந்து வரும் திரிணாமுல்...

Tamil Nadu Politics: నిమిషానికో మలుపు.. విజయ్ మాస్టార్ ప్లాన్.. ఏఐఏడీఎంకేతో చర్చలు!

Vijay’s TVK Eyes AIADMK Support: తమిళనాడులో ఎన్నికల ఫలితాల తర్వాతి...

ಪ.ಬಂಗಾಳದಲ್ಲಿ ಚುನಾವಣಾ ಫಲಿತಾಂಶ ಬಳಿಕ ನಿಲ್ಲದ  ಹಿಂಸಾಚಾರ: ನಾಲ್ವರು ಕಾರ್ಯಕರ್ತರ ಹತ್ಯೆ

ಕೋಲ್ಕತ್ತಾ,ಮೇ,6,2026 (www.justkannada.in):  ಪಶ್ಚಿಮ ಬಂಗಾಳದಲ್ಲಿ ಚುನಾವಣಾ ಫಲಿತಾಂಶ ಹೊರ ಬಂದ...