24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

Date:

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடபட்டது வரவேற்கதக்கது.

அதேபோல சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கு பேச சம வாய்ப்பு தர வேண்டும். ஆனால் ஆளுநர் உரை ஆளுங்கட்சி உரை போல் இருந்தது. அவரின் உரையில் அத்தனை பிழைகள் இருந்தன. அவரது உரையில் தமிழில் 37 பிழைகள் இருந்தன” என்று கூறினார்.

சட்டமன்றம்

அப்போது பேசிய சபாநாயகர், “வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் தமிழை உச்சரிக்க முயன்றதையே நாம் பாராட்ட வேண்டும். ஆளுநர் தமிழைக் கற்றுக்கொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “உறுப்பினர்கள் இருக்கையில் க்ளாஸில் தண்ணீர் வைப்பதற்குப் பதிலாக தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்” என்றார். அதற்கு ஓபிஎஸ், “அண்ணியார் நல்ல கருத்தைச் சொல்லியிருந்தாலும் அந்தக் கருத்து ஏற்புடையது அல்ல. சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை எறிவதற்கு வாய்ப்பு இருக்கிறது” எனக் கூறினார். அப்போது சட்டமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

பேச்சைத் தொடர்ந்த பிரேமலதா, “உறுதியாக காவிரி விவகாரத்திலும், மேகதாது விவகாரத்தில் யாரும் நம் உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. நேற்று கருப்பு தினமாக இருந்தது. அமோனியா தாக்குதலால் இவ்வளவு பேர் தமிழகத்தில் பாதித்தது இது முதல் முறை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அவர்களை நேரில் பார்க்கும்போது கண், காதுகளில் இருந்து ரத்தம் வந்தது. ஒரு பெண்ணாக அந்தப் பெண்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. அனைவரும் அவர்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ചരിത്രത്തിലാദ്യം; ഇറാനെതിരായ യുദ്ധം അവസാനിപ്പിക്കാന്‍ പ്രമേയം പാസാക്കി യു.എസിലെ ഇരുസഭകളും

വാഷിങ്ടണ്‍: അമേരിക്കന്‍ പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപിന് ശാസനയുമായി യു.എസ് സെനറ്റ്. ഇറാനെതിരായ...

'முதலீட்டாளர்களிடம் திமுக அரசு பணம் கேட்டதா?' – கவனம் பெறும் ஆந்திர அமைச்சரின் ட்வீட்!

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள்...

Medak Double Murder Case: ప్రాణ స్నేహితుల మధ్య చిచ్చు పెట్టిన EMI.. మెదక్‌లో జంట హత్యల కలకలం..

Medak Double Murder Case: మెదక్ జిల్లా చిన్నశంకరంపేట మండలం సురారం...

ಬೇರೆ ಕಡೆ ಇಲ್ಲದ ಕುಮಾರಸ್ವಾಮಿ, ನಿಖಿಲ್ ಹೋರಾಟ ಬಿಡದಿಯಲ್ಲಿ ಮಾತ್ರ ಯಾಕೆ? ಶಾಸಕ ಬಾಲಕೃಷ್ಣ ಕಿಡಿ

ಬೆಂಗಳೂರು, ಜೂನ್,23,2026 (www.justkannada.in): ಸರ್ಜಾಪುರ, ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ, ಜಂಗಮಕೋಟೆ, ದೊಡ್ಡಬಳ್ಳಾಪುರದಲ್ಲಿ ವಿವಿಧ...