20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

MUDA வழக்கில் அடுத்த திருப்பம்; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம்; ED சொல்லும் கணக்கு என்ன?

Date:

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) இழப்பீடாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இதில், சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரிக்க, மறுமுனையில் அமலாக்கத்துறையும் விசாரணையை மேற்கொண்டது.

சித்தராமையா

இந்த வழக்கில், இதுவரையில் சுமார் ரூ. 300 கோடி சந்தை மதிப்புள்ள 160 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது சித்தராமையாவுக்குத் தொடர்புடைய சுமார் ரூ. 100 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், “சித்தராமையா மற்றும் பிறர் தொடர்புடைய முடா ஊழல் வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் 09-06-2025 அன்று சுமார் ரூ.100 கோடி சந்தை மதிப்புள்ள 92 அசையா சொத்துக்கள் (MUDA நிலங்கள்) தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்கில், இதுவரையில் மொத்தமாக ரூ. 400 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன” என்று பதிவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഗ്രേറ്റ് നിക്കോബാര്‍: കേന്ദ്രത്തിന് സുതാര്യതയില്ലാത്ത നയമെന്ന് ജയറാം രമേശ്

ന്യൂദല്‍ഹി: ഗ്രേറ്റ് നിക്കോബാര്‍ പദ്ധതിയില്‍ കേന്ദ്രസര്‍ക്കാര്‍ സ്വീകരിക്കുന്നത് അസാധാരണമായ തരത്തില്‍ സുതാര്യതയില്ലാത്ത...

தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்: 'அமைப்பு விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டவர்' – CPI கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தார்....

Paraquat Herbicide Ban: హైకోర్టుకు చేరిన గడ్డి మందు వివాదం.. ప్రభుత్వ జీవోపై సవాల్

Paraquat Herbicide Ban: పారాక్వాట్ డైక్లోరైడ్ 24% ఎస్‌ఎల్ (Paraquat Dichloride...

ಪೌರ ಕಾರ್ಮಿಕರ ತ್ಚರಿತ ನೇಮಕಾತಿಗೆ  ಸೂಚಿಸಿದ ನಗರಾಭಿವೃದ್ಧಿ ಸಚಿವ ಡಾ.ಯತೀಂದ್ರ ಸಿದ್ದರಾಮಯ್ಯ.

  ಬೆಂಗಳೂರು, ಜೂ.೧೯,೨೦೨೬:  ಎಲ್ಲಾ ನಗರಗಳಲ್ಲಿ ಪೌರ ಕಾರ್ಮಿಕರ ಕೊರತೆ ಇದೆ....