17
May, 2025

A News 365Times Venture

17
Saturday
May, 2025

A News 365Times Venture

`அதிமுக-வில் ஒரே நிலைப்பாடு இல்லை…'- செங்கோட்டையன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன்

Date:

தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் இன்று மாவட்ட கலெக்டரை சந்தித்து கோடை கால குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாக பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி குடிநீர், மின்சாரம் தடையின்றி வழங்கப்பட வேண்டும். போடி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 18 ஆம் கால்வாய் திட்டத்தின் மூலமாக பாசனத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடம் ஆலோசித்துள்ளேன்”

தங்க தமிழ்ச்செல்வன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “செங்கோட்டையன் தனியாக டெல்லி செல்கிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமியுடன் சன்டையிடுகிறார். சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தால் செங்கோட்டையன் விவாதத்தில் பங்கேற்கிறார். இவர்கள் செயல்பாட்டை பார்த்தால் அதிமுக வில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை திமுக எதிர்க்கிறது, இது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை நாங்கள் கொண்டு வருவோம்.

தேனி கலெக்டர் அலுவலகம்

திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்க துறை சோதனை நடத்துவது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரிந்ததே இதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರು: ಆಕಸ್ಮಿಕ ಅಗ್ನಿ ಅವಘಡ: 3 ಮನೆಗಳು ಸುಟ್ಟು ಕರಕಲು

ಮೈಸೂರು,ಮೇ,17,2025 (www.justkannada.in): ಆಕಸ್ಮಿಕ ಅಗ್ನಿಅವಘಡ ಸಂಭವಿಸಿ ಮೂರು ಮನೆಗಳು ಸುಟ್ಟು...

‘ഇന്ത്യയുടെ എത്ര യുദ്ധ വിമാനങ്ങള്‍ നഷ്ടമായി? ഇന്ത്യന്‍ നീക്കം പാക്കിസ്ഥാനെ അറിയിച്ചെന്ന വിദേശകാര്യമന്ത്രിയുടെ പരാമര്‍ശത്തെ വിമര്‍ശിച്ച് രാഹുല്‍ ഗാന്ധി

ന്യൂദല്‍ഹി: ഭീകര കേന്ദ്രങ്ങള്‍ക്ക് എതിരെ മാത്രമായിരുന്നു ആക്രമണമെന്ന് തുടക്കത്തില്‍ പാക്കിസ്ഥാനെ അറിയിച്ചിരുന്നുവെന്ന...

NEP: `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' – அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை...

Jagdeep Dhankhar: “ఒసామా బిన్ లాడెన్” హత్య లాగే భారత్ చేసి చూపించింది..

Jagdeep Dhankhar: భారత్ పాకిస్తాన్‌పై నిర్వహించిన ‘‘ఆపరేషన్ సిందూర్’’‌ని ఉపరాష్ట్రపతి జగదీప్...