30
July, 2026

A News 365Times Venture

30
Thursday
July, 2026

A News 365Times Venture

"விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்"- காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமார்

Date:

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை.29) கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ” நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று சிறிதளவு நீரைத் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

மேகதாது

அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம்.

அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன்.

இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழகத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்நிலைகளை பார்வையிட முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഐഷെ ഘോഷിന്റെ ഫോണ്‍ ചോര്‍ത്തുന്നു; അടിയന്തരാവസ്ഥയ്ക്ക് സമാനമെന്ന് കേന്ദ്ര മന്ത്രിയും സമ്മതിക്കുന്നു: ആദര്‍ശ് എം. സജി

ന്യൂദല്‍ഹി: ഐഷെ ഘോഷിന്റെ ഫോണ്‍ ചോര്‍ത്താന്‍ ദല്‍ഹി പൊലീസ് ശ്രമിക്കുന്നുവെന്ന് സംശയിക്കുന്നതായി...

Off The Record: కందుకూరు పాలిటిక్స్‌లో కొత్త ట్విస్ట్.. మానుగుంట మహీధర్ రెడ్డి మళ్లీ రంగంలోకి?

Off The Record: కందుకూరు రాజకీయాల్లో ఒకప్పుడు తిరుగులేని నేత‌గా గుర్తింపు...

ಅಮೋಘ ನಾಟಕವೊಂದರ ವಜ್ರ ಮಹೋತ್ಸವ ವರ್ಷ : ಜೊತೆಗಿರುವನು ಚಂದಿರ- ಒಂದು ಸುಂದರ ಬೆಳದಿಂಗಳು

ಬೆಂಗಳೂರು,ಜುಲೈ,29,2026 (www.justkannada.in): ಕಳೆದ ವಾರ ಇಳೆಗಿಳಿದಿಹ ಬೆಳದಿಂಗಳಲ್ಲಿ ಜಳಕ ಮಾಡಿದಂತಹ...

എന്തുകൊണ്ട് അവര്‍ പാര്‍ട്ടി ഓഫീസിലെത്തി; എങ്ങനെ ലൊക്കേഷന്‍ ട്രാക്ക് ചെയ്തു: ദല്‍ഹി പൊലീസിനെതിരെ ഐഷെ ഘോഷ്

ന്യൂദല്‍ഹി: സി.പി.ഐ.എം കേന്ദ്ര കമ്മിറ്റി ഓഫീസായ എ.കെ.ജി ഭവനിലെത്തി തന്നെ അറസ്റ്റ്...