15
February, 2025

A News 365Times Venture

15
Saturday
February, 2025

A News 365Times Venture

2050ல் இந்தியா: குறையும் கருத்தரிப்பு; அதிகரிக்கும் முதியவர்கள் – ஐ.நா எச்சரிக்கையும் விளக்கமும்!

Date:

ஜப்பான் நாடு முதியவர்களால் நிரம்பி வழிகிறது. திருமணத்தில் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால், ஜப்பானில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட மனிதவள சிக்கல்களை ஜப்பான் எதிர்கொண்டுவருகிறது. இந்த நிலையில், 2050-ம் ஆண்டு முதியவர்களால் நிரம்பும் நாடுகளுடன் இந்தியாவும் இணையும் என ஐ.நா.சபை எச்சரித்திருக்கிறது. கருவுறுதல் விகிதம் குறைவதாலும், மக்களின் ஆயுள் அதிகரித்திருப்பதாலும் முதியோர்களின் எண்ணிக்கை கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜப்பான் – தனிமை – முதியவர்

இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் விளைவுகளில் ஒன்று, உழைப்பவர்கள் பற்றாக்குறையால் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்படும். அதே நேரத்தில் ஓய்வு பெற்ற முதியவர்களை அரசு ஆதரித்து, பராமரிக்க வேண்டிய சூழல் உருவாகும். ஐ.நா. சபையின் கணிப்பின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். அதாவது 2025-ல் 108 மில்லியனில் இருந்து 2050-ம் ஆண்டில் அது 254 மில்லியனாக அதிகரிக்கும். அப்போது, ​​மக்கள் தொகையில் 15 சதவிகிதம் முதியவர்கள்தான் இருப்பார்கள். 2056-ம் ஆண்டில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் கருவுறுதல் விகிதமும் குறைந்திருக்கிறது. 1950-ம் ஆண்டில் 5.9-க இருந்த கருவுறுதல் விகிதம் 2023-ல் 2.0 ஆகக் குறைந்துள்ளது. இந்த சிக்கல்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா, “இந்தியாவின் முதியோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால்களை முன்வைக்கிறது. குறிப்பாக மக்கள் தொகையில் 40 சதவிகித முதியவர்கள் ஏழ்மையான சூழலில் சிக்கித்தவிக்கிறார்கள். இது மேலும் சிக்கலையே அதிகப்படுத்தும்.” என்றார்.

இந்தியா – ஐ.நா

மேலும் தொடர்ந்தவர், “கடந்த ஆண்டு அசோசியேட்டட் பிரஸ் (Associated press) வெளியிட்ட அறிக்கையில், “தங்கள் பிள்ளைகளாலேயே கைவிடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கையும், பிள்ளைகளால் ஏமாற்றப்பட்ட முதிய பெற்றோர்கள், நீதிக்காக நீதிமன்றத்துக்கு வரும் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. வீடற்ற முதியவர்கள், சாலையில் கைவிடப்பட்ட முதியவர்கள், நோய் காரணமாக கண்டுகொள்ளாமல் தூக்கி எறியப்பட்டவர்கள் எனப் பலரைப் பராமரிக்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள், சிறிதும் பெரிதுமான காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” எனக் குறிப்பிடுகிறது.

இதன்மூலம், இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலைத் தெளிவாக கண்முன் நிறுத்துகிறது. மேலும், முதியவர்கள் என்பதால், சமூகத்தில் ஏமாற்றப்படுவதும், நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தப்படுவதும், அதுதொடர்பாக எழும் குற்றச்செயல்களும், புகார்களும், வழக்குகளும் என அதைச் சுற்றி அரசுக்கு இருக்கும் நெருக்கடிகளும் கவனிக்க வேண்டியது.

இந்திய பொருளாதாரம்

இந்தியா போன்ற நாடுகளில் மக்கள்தொகை கூடுதல் – குறைதல் சவாலின் தனித்துவமான பிரச்சினையில் ஒன்று, மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுதான். சில மாநிலங்களில் மக்கள்தொகை குறைந்து வருகிறது. சில மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதாவது இந்தியாவின் செழிப்பான மாநிலங்கள் எனக் கருதப்படும் தென் மாநிலங்களுக்கும், போதிய வருமானமற்ற வட மாநிலங்களுக்கும் இடையிலான பொருளாதார வேறுபாடு, மக்கள்தொகையால் ஏற்படும் சவால்களைத் தீவிரமாக்குகிறது.

குறைந்த கருவுறுதல் விகிதங்களை எதிர்கொள்ளும் கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களும், அதிக கருவுறுதல் விகிதங்களை எதிர்கொள்ளும் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களும் சந்திக்கும் சிக்கல் ஒரே மாதிரியானவை அல்ல. அதே நேரம், அதிக வரி செலுத்தும் மாநிலங்கள், மக்கள் தொகை கூடுதலாக இருக்கும் மாநிலங்களின் சுமைகளையும் சுமக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால், சுகாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சமூக அமைப்பு போன்றவை கடுமையாகப் பாதிக்கும். அதன் காரணமாக மாநிலங்களுக்கு மத்தியில் புலம்பெயர்வு, உழைப்புச் சுரண்டல், கல்வியற்றச் சமூகம், பாதுகாப்பற்றச் சூழல் உள்ளிட்ட சிக்கல்களையும் இந்தியா சந்திக்க வேண்டிவரும்.

மக்கள் தொகை

“வேலை செய்து ஓய்வில் இருக்கும் முதியவர்களை விட (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சியும், பொருளாதாரமும் முன்னேறும். இந்த காலகட்டத்தில்தான், பொருளாதார ஆதாயங்களை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை ஒவ்வொரு நாடும் தீவிரப்படுத்துகிறது. அதன் அடிப்படையில், 2018-ம் ஆண்டுமுதல் இந்தியாவின் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது 2055-ம் ஆண்டுவரை தொடரும் என ஐ.நா. குறிப்பிட்டிருக்கிறது.

‘மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் உழைக்கும் வயதைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இதை நிலையான வளர்ச்சியாக மாற்ற நாம் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். அதாவது கல்வி, தொழில் பயிற்சி, வாழ்க்கைத் திறன்களில் முதலீடுகளை முன்னுரிமைப்படுத்த வேண்டும். இளைஞர்கள், குறிப்பாக அதிக கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உற்பத்தி சார்ந்த பணிகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியா

எனவே, வட மாநிலங்களுக்கு, சுகாதாரப் பராமரிப்பு, குறிப்பாக பாலியல், இனப்பெருக்கம் தொடர்பான விழிப்புணர்வு, கல்வி, திறன் மேம்பாடு போன்ற அணுகலை மேம்படுத்துவதும், அதே நேரத்தில், மக்கள் தொகையில் தோய்வைக் கண்டுவரும் தென் மாநிலங்கள் முதியோர் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் வயதான மக்கள்தொகையால் ஏற்படவிருக்கும் சிக்கலை எதிர்கொள்ளத் தயாராகலாம்” என்கிறார் பூனம் முத்ரேஜா.

இந்தியாவின் மக்கள்தொகையின் மற்றொரு கவனிக்கத்தக்கச் சிக்கல், பாலின சமத்துவமின்மை. பல வயதான பெண்கள், குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள கைம்பெண்கள் சொத்துக்கள், வருமானம், அடிப்படை சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் இல்லாமல் வாழ்கின்றனர். குழந்தைகள் முதல் வயதான குடும்ப உறுப்பினர்கள் வரை பராமரிக்கப்பட வேண்டியவர் யாராக இருந்தாலும் அந்தச் சுமையின் பெரும்பகுதி பெண்கள் மீதுதான் விழுகிறது. இதைச் சமன்படுத்தப் பெண்கள், முதியவர்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரமளித்தல் வேண்டும்.

இந்தியா பெண்கள்

பொருளாதாரத்தில் பெண்களின் கணிசமான பங்களிப்பு இல்லாமல் எந்த நாடும் பொருளாதார ரீதியாக முன்னேறியதில்லை. வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் பழைய தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தவும், பணியிடங்களை முதியவர்களும் பணிசெய்யும் வகையில் மாற்றவும் ஊக்குவிக்கும் ஜப்பானின் முயற்சிகளையும், ஸ்காண்டிநேவிய நாடு போல மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு, பெற்றோர் விடுப்பு, குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஆர்வப்படுத்தும் திட்டங்களை ஊக்குவிக்கலாம் என்கிறார் மக்கள்தொகைப் பணியகத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெனிஃபர் டி. சியுப்பா.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Hey Chikittha : వాహ్.. పవన్ కళ్యాణ్ సాంగ్ పేరుతో సినిమా.. పోస్టర్‌లోనూ పవన్‌ కటౌట్..

బద్రికి సినిమా రిలీజ్‌ అయి 25 ఏళ్లైంది. పూరీ జగన్నాథ్...

ಸಹಜ ಸ್ಥಿತಿಯತ್ತ ಮರಳಿದ ಉದಯಗಿರಿ: ಇಂದು ಗೃಹಸಚಿವರಿಂದ ಭೇಟಿ

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,14,2025 (www.justkannada.in): ಉದಯಗಿರಿ ಪೊಲೀಸ್ ಠಾಣೆ ಮೇಲೆ ಕಲ್ಲು ತೂರಾಟ...

ആര്‍.രാജഗോപാല്‍ ദി ടെലഗ്രാഫിലെ എഡിറ്റര്‍ അറ്റ് ലാര്‍ജ് സ്ഥാനം രാജിവെച്ചു

കൊല്‍ക്കത്ത: പ്രമുഖ മാധ്യമ പ്രവര്‍ത്തകന്‍ ആര്‍.രാജഗോപാല്‍ ദി ടെലഗ്രാഫ് പത്രത്തിന്റെ എഡിറ്റര്‍...

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: “குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' – DGP-யிடம் மனைவி மனு

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார்...