15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

`4,500 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும்!'- பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்; சிக்கிய பெண் வி.ஏ.ஓ

Date:

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “வீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்யவேண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த மனு, அப்பகுதி வருவாய் கிராமத்திற்குட்பட்ட ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி‌யின் பரிசீலனைக்கு வந்துள்ளது.

அப்போது பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த குமாரவேலுவிடம், பட்டா மாறுதல் செய்துகொடுக்க தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என வி.ஏ.ஓ. பத்மாவதி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குமாரவேல் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என பதில் கூறியிருக்கிறார். இதையடுத்து லஞ்சம் தொடர்பாக பேரம் பேசிய வி.ஏ.ஓ. பத்மாவதி, 5000 ரூபாயாவது லஞ்சம் தந்தால்தான் பட்டா பெயர் மாற்றம் செய்யமுடியும் என கூறியுள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பமில்லாத குமாரவேல் பட்டா பெயர் மாற்றுவதற்கு வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்டது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், வி.ஏ.ஓ. பத்மாவதியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். அதன்படி ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற

குமாரவேல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியபடி ரசாயனம் தடவிய ரூ.4500 நோட்டுகளை வி.ஏ.ஓ. பத்மாவதியிடம் கொடுத்தார். வி.ஏ.ஓ. பத்மாவதி பணத்தை வாங்கிய நேரத்தில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து வி.ஏ.ஓ.பத்மாவதி கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ക്യാമ്പസില്‍ അമ്പലം പണിയണം; അങ്ങനെ കുറേ പണം കിട്ടും; ജെ.എന്‍.യു വി.സിയുടെ ‘മുട്ടന്‍’ ഐഡിയ

ന്യൂദല്‍ഹി: ജെ.എന്‍.യുവിലെ സാമ്പത്തിക പ്രതിസന്ധി പരിഹരിക്കാന്‍ ഒരു ‘ മുട്ടന്‍’ ഐഡിയ...

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும்...

Shridhar Chillal: మూడు అంతస్తుల భవనం కంటే పొడవైన గోర్లు.. గిన్నిస్ బుక్ లో స్థానం.!

Shridhar Chillal: ఎడమచేతి వాటం.. మనలో చాలా తక్కువ మందికి మాత్రమే...

‘ഇനി ഇസ്‌ലാമിക് റിപ്പബ്ലിക് ഓഫ് ബ്രിട്ടന്‍’; ഉപരോധ ഭീഷണിക്കിടെ ബ്രിട്ടന്റെ പേരുമാറ്റി നെതന്യാഹു

  ലണ്ടന്‍: ബ്രിട്ടനെ ‘ഇസ്‌ലാമിക് റിപ്പബ്ലിക് ഓഫ് ബ്രിട്ടന്‍’ എന്ന് വിശേഷിപ്പിച്ച്...