25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

“அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்..'' – ட்ரம்ப் எச்சரிக்கை

Date:

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அமெரிக்கா சோமாலியாவில் வான்வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது. `அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்’ என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வான்வழி தாக்குதல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம்.

எங்கள் இராணுவம் பல ஆண்டுகளாக இந்த ISIS தாக்குதல் திட்டமிடுபவரை குறி வைத்து வருகிறது, ஆனால் பைடனும் அவரது கூட்டாளிகளும் இந்த வேலையை அவர்களைச் செய்யவிடவில்லை. தற்போது நான் அதற்கு அனுமதித்து இருக்கிறேன். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Water Bottle Cleaning: మీరు నీళ్లు తాగే బాటిల్ శుభ్రంగా ఉందా.? బ్యాక్టీరియా, దుర్వాసన రాకుండా ఇలా చేసేయండి.!

Water Bottle Cleaning: మనం ప్రతిరోజూ ఉపయోగించే ప్లాస్టిక్ వాటర్ బాటిల్‌ను...

ದೇವನಹಳ್ಳಿ ಭೂಸ್ವಾಧೀನ: ಎಕರೆಗೆ ₹2.70 ಕೋಟಿ ಪರಿಹಾರಕ್ಕೆ ಶಿಫಾರಸು

ಬೆಂಗಳೂರುಜೂನ್,24,2026 (www.justkannada.in): ದೇವನಹಳ್ಳಿ ತಾಲ್ಲೂಕು ಚನ್ನರಾಯಪಟ್ಟಣ ಹೋಬಳಿಯ ಗೋಕರೆಬಚ್ಚೇನಹಳ್ಳಿ ಮತ್ತು ಹ್ಯಾಡಾಳ...

പാശ്ചാത്യ ലോകം റഷ്യയുമായി യുദ്ധത്തിന് ശ്രമിക്കുന്നു; രാജ്യം തയ്യാറായിരിക്കണമെന്ന് പുട്ടിന്‍

മോസ്‌കോ: റഷ്യക്കെതിരെ പാശ്ചാത്യ രാജ്യങ്ങള്‍ സൈനിക ഏറ്റുമുട്ടലിനൊരുങ്ങുകയാണെന്ന് റഷ്യന്‍ പ്രസിഡന്റ് വ്‌ളാദിമിര്‍...

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை...