31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

"ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்கள் காத்து வாங்கியது" – எடப்பாடி பழனிசாமி பேச்சு

Date:

“சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி

தருமபுரியில் நடந்த அதிமுக விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “இன்று தவெக ஆட்சிக்கு வந்திருப்பது ஒரு விபத்து, இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ஒரு கொள்கையும் கிடையாது. இந்த அரசு ஒரு மாததில் ரூ. 28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்த ஆண்டில ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கினால்தான் அரசை நடத்த முடியும்.

ஏரியில் வண்டல் மணல் எடுப்பவர்களை மாபியா என்று கூறும் அமைச்சர், மாபியாக்களைத் தப்பிக்க விட்டு விவசாயிகளைக் கொச்சைப்படுத்துகிறார். ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள். மூன்று பேர் மட்டும்தான் பேசுகிறார்கள், இன்று தமிழகமே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி
தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் தேவைக்கு மட்டும கடன் வாங்கப்பட்டது. கஜா புயல், கொரோனா ஊரடங்கு எனப் பல்வேறு பிரச்னைகளை அதிமுக ஆட்சி எதிர்கொண்டாலும், இறுதி ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் கடனை மட்டும்தான் வாங்கியது.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்துள்ளது? பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது.

ஜன நாயகன் படத்துக்கு அப்படி இப்படி என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால், படம் வந்த ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்து வாங்கியது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும் உள்ளது. ரீல் விடுகிறார்கள் அல்லது ரில்ஸ் போடுகிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்பட்டது.

அதன் பின்பு ஜெனரேட்டர் மின்சாரத்தால் மீண்டும் பேசியவர், “அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியோட லட்சணம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഖാര്‍ഗെ സംസാരിച്ച വേദി ശുദ്ധീകരിച്ച വിവാദം; കേസെടുക്കാന്‍ ആവശ്യപ്പെട്ട രാഹുല്‍ ഗാന്ധിക്കെതിരെ എസ്.സി-എസ്.ടി പ്രകാരം എഫ്.ഐ.ആര്‍

ഡെറാഡൂണ്‍: കോണ്‍ഗ്രസ് അധ്യക്ഷന്‍ മല്ലികാര്‍ജുന്‍ ഖാര്‍ഗെ സംസാരിച്ച വേദി ശുദ്ധീകരിച്ച സംഭവത്തില്‍...

Pak Spy Network Busted: మేడ్ ఇన్ చైనా కెమెరాలు, పాక్‌కు లైవ్.. ఐఎస్ఐ గూఢచారి అరెస్ట్..

Pak Spy Network Busted: పాకిస్తాన్ గూఢచారం సంస్థ ఇంటర్ సర్వీస్...

വെനസ്വേലന്‍ എണ്ണ ഉപയോഗിച്ച് യു.എസിന്റെ പെട്രോളിയം കരുതല്‍ ശേഖരം നിറയ്ക്കുമെന്ന് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: വെനസ്വേലന്‍ എണ്ണ ഉപയോഗിച്ച് തങ്ങളുടെ പെട്രോളിയം കരുതല്‍ ശേഖരം നിറയ്ക്കുമെന്ന്...

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" – அமைச்சர் விஸ்வநாதன்

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார்...