31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" – அமைச்சர் விஸ்வநாதன்

Date:

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார்.

அமைச்சர் விஸ்வநாதன்

சட்டமன்றத் தேர்தலைப் போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக பெரிய வெற்றியைத் தமிழகத்தில் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியும், இப்போது தவெகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “2029-இல் பாராளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே 2029-இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், மூன்று முறை, 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். 2029-இல் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு நாங்கள் ஒத்த குரலில், ஒற்றைக்கட்டையாக நிற்போம்” எனப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വെനസ്വേലന്‍ എണ്ണ ഉപയോഗിച്ച് യു.എസിന്റെ പെട്രോളിയം കരുതല്‍ ശേഖരം നിറയ്ക്കുമെന്ന് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: വെനസ്വേലന്‍ എണ്ണ ഉപയോഗിച്ച് തങ്ങളുടെ പെട്രോളിയം കരുതല്‍ ശേഖരം നിറയ്ക്കുമെന്ന്...

ಬೆಂಗಳೂರು ಮೇಲಿನ ಒತ್ತಡ ಕಡಿಮೆ ಮಾಡಲು ಮೈಸೂರು ಸೇರಿ 5 ನಗರಗಳ ಅಭಿವೃದ್ಧಿಗೆ ಹೊಸ ಯೋಜನೆ- ಸಿಎಂ ಡಿ.ಕೆ. ಶಿವಕುಮಾರ್

ಮೈಸೂರು ಆಗಸ್ಟ್ ,29,2026 (www.justkannada.in): ಬೆಂಗಳೂರು ನಗರದಲ್ಲಿ ಹೆಚ್ಚುತ್ತಿರುವ ಜನಸಾಂದ್ರತೆ,...

ഇറാന്‍ നാവികസേന ഇപ്പോഴും ജീവനോടെയുണ്ട്; ട്രംപിന്റെ അവകാശവാദത്തിനെതിരെ ഇറാന്‍ നാവിക സേന കമാന്‍ഡര്‍

ടെഹ്‌റാന്‍: ഇറാന്റെ നാവികസേന ഇപ്പോഴും നിലനില്‍ക്കുന്നുവെന്നും അതിന് പ്രശ്‌നങ്ങളില്ലെന്നും ഇറാന്‍ നാവിക...