6
July, 2026

A News 365Times Venture

6
Monday
July, 2026

A News 365Times Venture

'காமேனியின் இறுதிச் சடங்கிலேயே ஈரான் தலைவர்களை ஒழித்துவிட முடியும்'- ட்ரம்ப் பேச்சு; ஈரான் பதிலடி!

Date:

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உயிரிழந்தார் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி.

இவரது இறுதிச்சடங்கு ஈரானில் நேற்று (ஜூலை 4, 2026) முதல் ஜூலை 9-ம் தேதி வரை ஈரானில் நடைபெற்று வருகிறது.

இந்த இறுதிச்சடங்கில் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலியும், மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

இறுதிச் சடங்கு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் Axios செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள போன்கால் பேட்டியில், “அவர்கள் (ஈரானின் முக்கிய தலைவர்கள்) அனைவரும் அங்கேதான் இருக்கிறார்கள்.

காமேனியின் இறுதிச் சடங்கு

ஒரே ஒரு தாக்குதலில் நாம் அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட முடியும்.

ஆனால், நாம் அதைச் செய்யப் போவதில்லை. ஏனெனில், அதற்குப் பிறகு நாம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எவருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இப்போது ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், “மனிதர்களைக் கொன்றுவிட முடியும். ஆனால் அவர்களின் கொள்கைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.

நீங்கள் அயதுல்லா காமேனியைத் தான் கொன்றீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு வாசனைத் திரவியக் குப்பியைத்தான் உடைத்திருக்கிறீர்கள். அதன் நறுமணம் இப்போது எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.

உங்களுக்கு நாகரிகமும் இல்லை, வரலாறும் இல்லை, மானமும் இல்லை… அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.” என்று பதிவிட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

യു.എസുമായി ഇറാന്‍ സമാധാനത്തിലല്ല; ധാരണാപത്രം നടപ്പാക്കുന്നത് പ്രയാസമെങ്കിലും അസാധ്യമല്ലെന്ന് ഖാലിഭാഫ്

ടെഹ്‌റാന്‍: ഇറാന്‍-യു.എസ് ധാരണാ പത്രത്തിലെ വ്യവസ്ഥകള്‍ നടപ്പാക്കുന്നത് പ്രയാസകരമാണെങ്കിലും അസാധ്യമല്ലെന്ന് ഇറാന്‍...

Eluru: తీవ్ర విషాదం.. రైలు ఢీకొని ఒకే కుటుంబానికి చెందిన నలుగురు మృతి!

Eluru: ఏలూరు జిల్లా చేబ్రోలు రైల్వే స్టేషన్ సమీపంలో శనివారం రాత్రి...

‘അധികാരത്തിലുള്ളത് ഹിന്ദുക്കളെ കൊള്ളയടിക്കുന്നവര്‍’; രാമക്ഷേത്ര തട്ടിപ്പില്‍ കേന്ദ്രത്തിനെതിരെ ഉദ്ധവ് താക്കറെ

മുംബൈ: അയോധ്യ രാമക്ഷേത്ര ഫണ്ട് തട്ടിപ്പില്‍ കേന്ദ്ര സര്‍ക്കാരിനും ബി.ജെ.പിക്കുമെതിരെ വീണ്ടും...

மேகதாது: டெல்டா விவசாயிகள் அச்சத்தைப் போக்க அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! – அன்புமணி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு...