18
June, 2026

A News 365Times Venture

18
Thursday
June, 2026

A News 365Times Venture

திருவாரூர்: ”பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” – ஜி.கே.வாசன் ஆவேசம்

Date:

திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் என்கிற அமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது என்பதிலே த.மா.காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

மேகதாது அணைகட்ட அனுமதிக்கக் கூடாது. இந்த மண்டலம் பாலைவனமாகிவிடும். இரு மாநிலங்களுடைய உறவு பிரச்னை மட்டுமல்ல உயிர் பிரச்னையும் கூட.

திருவாரூர்-செய்தியாளர் சந்திப்பில் ஜி.கே.வாசன்

தமிழக அரசு விவசாயிகளுடைய எண்ணங்களுக்கு 100% பூர்த்தி செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். விவசாயக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளுடைய எண்ணம். இதனை த.மா.கா-வும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

தண்ணீரும் ஜூன் 12 ஆம் தேதி திறந்துவிடாத சூழலிலே விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் இருக்கிறார்கள். விவசாயிகளுடைய குறைகளை 100% தீர்க்க வேண்டியது அரசின் கடமை. குழந்தைகள், பெண்கள் தொடர்பான பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.

சமீப நாள்களாக குழந்தைகளை வெளியிலே விடுவதற்குக் கூட பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்திற்கும் பயத்திற்கும் காரணம் கஞ்சா போதை பொருள்கள். சென்னையில் மட்டும் 24 மணி நேரத்திலே 12 குற்றங்கள் நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சி என்ற முறையிலே அரசைக் குறை கூற விரும்பவில்லை. தப்புக்கள் நடக்கின்றன என்று தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கூறுகின்றன நானும் கூறுகிறேன். மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசுதான். இது போன்ற தவறான செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

அரசு இதில் உரிய தனி கவனம் செலுத்தி முற்றுப்புள்ளி வைப்பதற்கான நிலையை ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களை நேரடியாகப் பார்த்தால் சுட்டுக் கொல்ல வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது. அதில் மாற்று கருத்தே இருக்க கூடாது. அவர்களுக்கு யாரும் வாதாடக் கூடாது.

மிருகத்தனமான செயலிலே ஈடுபடும் போது வேறு வழி இல்லை. மூன்று வயது பச்சிளம் குழந்தையை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. இது போன்ற நிலை இருக்கவே கூடாது. இந்த நிலைக்குக் காரணம் தனிமனித ஒழுக்கம்தான். தனிமனித ஒழுக்கம் கெடுவதற்குக் காரணம் போதைப்பொருள் மற்றும் குடி. இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயகத்தில தனி மனிதர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. இந்தக் கட்சியில இருந்து அந்தக் கட்சிக்குப் போகலாம் அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்குப் போகலாம். தேர்தலுக்கு முன்பு ஒரு கட்சியில் இருந்து எதிர்த்து வேலை செய்யலாம். தேர்தலுக்குப் பிறகு ஆட்சியாளர்கள் இருக்கின்ற இடத்திற்குப் போய் அவர்களோடு இணைந்து கொள்ளலாம்.

இதை தினம்தோறும் எல்லாக் கட்சிகளும் சந்திப்பதைப் பார்த்து கொண்டிருக்கிறோம். இந்தியா பொருளாதார ரீதியாக உயர வேண்டும். பொருட்களுடைய விலை குறைய வேண்டும், மக்கள் சந்தோஷமாக இருக்க நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தனியார் நிறுவனத்திடம் மாசப்படி பெற்ற வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பினராயி விஜயன் மகள்!

கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான ​சி.எம்.ஆர்.எல்  மற்றும் பினராயி...

DA Hike: విద్యుత్ ఉద్యోగులకు సర్కార్‌ గుడ్‌న్యూస్..

DA Hike: రాష్ట్రంలోని విద్యుత్ ఉద్యోగులకు తెలంగాణ ప్రభుత్వం శుభవార్త అందించింది....

ಜಯದೇವ ರೋಗಿಗಳ ಸಾವು ಕೇಸ್: ಇನ್ನೆರಡು ತಿಂಗಳಲ್ಲಿ ಸಿಬ್ಬಂದಿಗಳ ಕೊರತೆ ನಿವಾರಣೆ- ಸಚಿವ ಡಾ ಶರಣ ಪ್ರಕಾಶ್ ಪಾಟೀಲ್

ಮೈಸೂರು,ಜೂನ್,17,2026 (www.justkannada.in):  ಜಯದೇವ ಹೃದ್ರೋಗ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ 11 ರೋಗಿಗಳ ಸಾವು...

നാഷണല്‍ കോണ്‍ഫറന്‍സിന്റെ തത്വങ്ങള്‍ വില്പനയ്ക്കുള്ളതല്ല; രാഷ്ട്രീയ നിലപാട് വ്യക്തമാക്കി ഒമര്‍ അബ്ദുള്ള

  ശ്രീനഗര്‍: അധികാരത്തിന് വേണ്ടി തങ്ങളുടെ രാഷ്ട്രീയ പ്രത്യയശാസ്ത്രത്തിലോ അടിസ്ഥാന മൂല്യങ്ങളിലോ...