8
February, 2026

A News 365Times Venture

8
Sunday
February, 2026

A News 365Times Venture

சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு!

Date:

வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் உடல் நலனைக் காரணமாகக் கூறி பதவி விலகிய ஜகதீப் தன்கரின் இடத்தை நிரப்பவிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

இதற்கு முன் வருகின்ற செவ்வாய் கிழமை பாஜக நாடாளுமன்ற குழுவை ராதாகிருஷ்ணன் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

திருப்பூர் டு மகாராஷ்டிரா

சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் அக்டோபர் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்தவர். 2003 முதல் 2006 வரை தமிழக பாஜகவின் தலைவராக செயல்பட்டவர்.

இந்த காலத்தில்தான் பாஜக திமுகவின் கூட்டணியை இழந்தது. பின்னர் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

CP Radhakrishnan

ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் இயங்களில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் சி.பி.ராதாகிருஷ்ணன். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு 1998, 1999 தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு தேர்தல்களில் தொடர்தோல்விகளைச் சந்தித்தார்.

ஆளுநராக…

பிப்ரவரி 18, 2023 முதல் ஜூலை 30, 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் 2024 முதல் ஜூலை 2024 வரை தெலங்கானா ஆளுநராகவும், மார்ச் முதல் ஆகஸ்ட் 2024 வரை புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகளை வகித்தார்.

பின்னர் ஜூலை 31, 2024-ல் மகாராஷ்டிரா ஆளுநராக பதவியேற்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯುವ ಶಾಸಕರು ಡಿಕೆಶಿ ಬೆಂಬಲಕ್ಕೆ ನಿಂತಿದ್ದೇವೆ: ಪ್ರಾಣ ಬೇಕಾದ್ರೂ ಕೊಡ್ತೇವೆ- ಕಾಂಗ್ರೆಸ್ ಶಾಸಕ

ದಾವಣಗೆರೆ,ಫೆಬ್ರವರಿ,7,2026 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಇದೀಗ ಅಧಿಕಾರ ಹಂಚಿಕೆ, ಕುರ್ಚಿ ವಿಚಾರದ...

ഗൊഗോയ് പാക് ചാരനെന്ന് ആവര്‍ത്തിച്ച് ഹിമന്ത; അസം മുഖ്യമന്ത്രി സ്വയം നാണംകെടുകയാണെന്ന് മറുപടി

ഗുവാഹത്തി: കോണ്‍ഗ്രസ് നേതാവും ലോക്‌സഭാ എം.പിയുമായ ഗൗരവ് ഗൊഗോയ്ക്ക് പാകിസ്ഥാനുമായി ബന്ധമുണ്ടെന്ന്...

"செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது விஜய்...

Tata Punch EV: హైటెక్ ఫీచర్లతో.. టాటా Punch.ev ఫేస్‌లిఫ్ట్ మోడల్‌ వచ్చేస్తోంది

టాటా తన ప్రసిద్ధ ఎలక్ట్రిక్ SUV పంచ్ EV కొత్త వెర్షన్‌ను...