30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

Date:

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் போராட்டக்காரர்களை நேற்று மாலை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். சீமான், கி.வீரமணி, அ.தி.மு.க எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் போராடும் தூய்மைப் பணியாளர்களிடம் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், தீர்வு கிடைக்கும் வரை சமரசமின்றி போராட்டம் தொடரும் என உறுதியுடன் இருக்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

போராடும் தூய்மைப் பணியாளர்கள்

‘சாதிய ஆதிக்க திமிரோடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகிறார்!’ – போராட்டக்குழு கடும் குற்றச்சாட்டு

இதற்கிடையில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தாமல், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இவ்விவகாரத்தில் தலையிடுவது முறையானதல்ல என்று போராடும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, “நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று யார் சொன்னது. 4 நாள்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கேன். தூய்மைப் பணியாளர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

கே.என்.நேரு

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிக்கச் சொல்லியிருக்கிறார். வடமாநில தொழிலாளர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியானது.

அதிமுக 17,000 தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ததாகக் கூறுவதெல்லாம் பொய்யானது. தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது ஒரே நாளில் செய்யவேண்டிய விஷியமல்ல. அதுகுறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുസ്‌ലിങ്ങള്‍ മുഖ്യമന്ത്രിയാകരുതെന്ന് ഭരണഘടനയില്‍ എവിടെയെങ്കിലും പറഞ്ഞിട്ടുണ്ടോ? വെള്ളാപ്പള്ളിയോട് ടി.എസ്. ശ്യാംകുമാര്‍

  കോഴിക്കോട്: യു.ഡി.എഫ് അധികാരത്തിലെത്തിയാല്‍ മുസ്‌ലിം ലീഗില്‍ നിന്നും മുഖ്യമന്ത്രിയുണ്ടായേക്കാമെന്ന എസ്.എന്‍.ഡി.പി...

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...

West Bengal Exit Poll 2026: బెంగాల్ లేటెస్ట్ ఎగ్జిట్ పోల్.. బీజేపీదే అధికారం..

West Bengal Exit Poll 2026: నాలుగు రాష్ట్రాలు, ఒక కేంద్రపాలిత...

ಶೀಲ ಶಂಕಿಸಿ ಪತ್ನಿ ಕೊಂದಿದ್ದ ಆಪರಾಧಿ ಪತಿಗೆ ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ ಪ್ರಕಟ.

ಮಂಡ್ಯ. ಏಪ್ರಿಲ್, 30,2026 (www.justkannada.in):  ಶೀಲ ಶಂಕಿಸಿ ಪತ್ನಿಯನ್ನು ಕೊಲೆಗೈದಿದ್ದ...