22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

“பெரிய தொகை தான்; ஆனாலும், விவசாய நலன் காக்க கட்டத் தயார்'' – ட்ரம்ப் வரி குறித்து பிரதமர் மோடி

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார்.

இது இந்திய ஏற்றுமதிகளைப் பெரியளவில் பாதிக்கும். இப்படி பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித்துறை, விவசாயத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் அடங்கும்.

மோடி என்ன சொல்கிறார்?

இந்த வரி குறித்து முதல்முறையாக மறைமுகமாக பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமக்கு விவசாயிகளின் நலனே மிக முக்கியமானது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பொருள் உற்பத்தியாளர்களின் நலனை இந்தியா சமரசம் செய்யாது.

அதற்காக நாம் பெரிய தொகை செலுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்… இந்தியா தயாராக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

மோடி – ட்ரம்ப்

ட்ரம்ப் வரிக்கு காரணம் என்ன?

ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதாக அமெரிக்கா தனது வரியை இரட்டிப்பாக்கி உள்ளது.

மேலும், அபராத தொகையும் இத்துடன் விதிக்க உள்ளது. ஆனால், அந்தத் தொகை எவ்வளவு என்று இன்னும் சொல்லவில்லை.

இந்த நிலையில், மோடி விவசாய நலன் காக்க எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கட்டத் தயார் என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

സ്ത്രീ സംവരണം ബി.ജെ.പി വൈകിപ്പിക്കുന്നു, സോണിയയുടെയും രാഹുലിന്റെയും പഴയ കത്ത് പുറത്തുവിട്ട് കോൺഗ്രസ്

ന്യൂ ദൽഹി: സ്ത്രീ സംവരണം നടപ്പിലാക്കുന്നത് മനപൂർവ്വം വൈകിപ്പിക്കാൻ പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര...

அண்ணா நகர் 2026! – சிற்றரசின் ‘செக்-மேட்’ பாலிடிக்ஸ்!

சென்னை என்றாலே அது ‘திமுகவின் கோட்டை’ என்பது அரசியல் பாலபாடம். அதிலும்...

Off The Record : హైలెవల్ బ్రిడ్జిపై కాంగ్రెస్, బీజేపీ మధ్య మాటల యుద్ధం

హైలెవల్‌ బ్రిడ్జి చుట్టూ హైటెన్షన్ పాలిటిక్స్‌ నడుస్తున్నాయా? శంకుస్థాపన రాయి పడీ...

ಮೈಸೂರಿನ GRS  ಫ್ಯಾಂಟಸಿ ಪಾರ್ಕ್‌ ಗೆ ಎರಡು ರಾಷ್ಟ್ರೀಯ ಪ್ರಶಸ್ತಿಗಳ ಗರಿ

ಮೈಸೂರು,ಏಪ್ರಿಲ್,21,2026 (www.justkannada.in): ನಗರದ ಖ್ಯಾತ ಅಮ್ಯೂಸ್‌ಮೆಂಟ್‌ ಪಾರ್ಕ್‌ ಜಿಆರ್‌ಎಸ್‌ ಫ್ಯಾಂಟಸಿ...