13
February, 2025

A News 365Times Venture

13
Thursday
February, 2025

A News 365Times Venture

Pakistan: 'இந்திய மீனவர்' மரணம் – தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கபடாத இந்தியர்கள் எத்தனை பேர்?

Date:

2022ம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறைசாலையில் கடந்த வியாழன் அன்று உயிரிழந்துள்ளார்.

பாபு என அடையாளம் காணப்படும் அந்த நபர் தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்டு பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னை விடுதலை செய்வதற்காகக் காத்திருந்த நிலையில், மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் இதேபோல சிக்கிக்கொண்டு, தண்டனைக்காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் மரணத்துக்கு முன்பு வீடு திரும்பிவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் 180 இந்திய மீனவர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் சிறைகளில் மரணமடையும் எட்டாவது இந்தியர் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Jail

கைதிகளாக இருக்கும் மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என இந்திய அரசு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், தண்டனைக் காலம் முடிந்தவர்களைக் கூட பாகிஸ்தான் திருப்பி அனுப்பாதது சர்வதேச அரசியல் நோக்கர்களைப் புருவமுயர்த்தச் செய்கிறது.

கைது செய்யப்பட்ட பெரும்பாலான மீனவர்கள் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளிலிருந்து மீன் பிடிக்க சென்றவர்கள். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Pakistan சிறைகளில் இந்திய மீனவர்கள்!

கடந்த ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் சிறைகளில் 209 இந்திய மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கின்றது.

இவர்களில் 2021 முதல் சிறையில் இருப்பவர்கள் 51 பேர். 2022 முதல் இருப்பவர்கள் 130 பேர். 2023ல் 9 பேரும் 2024ல் 19 பேரும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மீனவர்களில் 134 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 24 பேர் சாமன் டையூ, 18 பேர் மகாராஷ்டிரா, 17 பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தலா 7 பேர். பீகார், ஒடிஷாவைச் சேர்ந்தவர்கள் தலா 1 நபர்கள்.

இந்திய அரசின் நடவடிக்கையால் 2014 முதல் 2639 மீனவர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகா. அமைச்சர்; முதல் மனைவியை மறைத்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சே...

Ambati Rambabu: వంశీని ఎందుకు అరెస్ట్ చేశారో అర్థం కావడం లేదు..

Ambati Rambabu: గన్నవరం మాజీ ఎమ్మెల్యే వల్లభనేని వంశీని పోలీసులు ఎందుకు...

ಗುಪ್ತಚರ ಎಂ.ಲಕ್ಷ್ಮಣ ಮತ್ತು ಭಾರತೀಯ ನ್ಯಾಯಸಂಹಿತೆ..!

ಮೈಸೂರು,ಫೆಬ್ರವರಿ,13,2025 (www.justkannada.in): ವ್ಯಕ್ತಿಯೊಬ್ಬನ ಅವಹೇಳನಕಾರಿ ಪೋಸ್ಟ್ ವಿಚಾರವಾಗಿ ಮೈಸೂರಿನ ಉದಯಗಿರಿ...

അശ്ലീലപരാമര്‍ശം; യൂട്യൂബര്‍ രണ്‍ബീര്‍ അല്ലാഹ്ബാദിയ ഉള്‍പ്പെടെയുള്ളവര്‍ക്കെതിരെ അസമിലും കേസ്

റായ്പൂര്‍: യൂട്യൂബ് ഷോയായ ഇന്ത്യാസ് ഗോട്ട് ലാറ്റന്റിലെ പോഡ്കാസ്റ്ററും യൂട്യൂബറുമായ രണ്‍വീര്‍...