11
September, 2026

A News 365Times Venture

11
Friday
September, 2026

A News 365Times Venture

தாராபுரம்: "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில்…"- தி‌முக வேட்பாளர் காட்டம்

Date:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி உறுப்பினரான அ.தி.மு.க- வைச் சேர்ந்த சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தாராபுரம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதி வேட்பாளராக தொழில்முறை வழக்கறிஞர் சுகன்யா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க குடும்பப் பின்னணியைக் கொண்ட இவருக்கு அக்கட்சியைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர் சுகன்யா

இந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர் அவரைச் சந்தித்து பேசுகையில், “தலைவர் ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார். தலைவர் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு வாழ்த்து பெற்ற பிறகு முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்காக நிறைய பேசுகிறேன்.

நிச்சயமாக வெற்றி வேட்பாளராக வருவேன். வெற்றிக்கனியை‌‌ தலைமைக்குச் சேர்க்க வேண்டும். தற்போது சட்டமன்றம் எப்படி நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது. நிச்சயமாக சென்னையிலிருந்து திரும்பி வந்து பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘ചായ കുടിക്കാന്‍ പോയതല്ലല്ലോ’; ഇ.ഡി നടപടികള്‍ക്കിടെ പിണറായിയെ പരിഹസിച്ച് അലന്‍ ഷുഹൈബ്

കോഴിക്കോട്: സി.എം.ആര്‍.എല്‍ മാസപ്പടി കേസില്‍ പ്രതിപക്ഷ നേതാവ് പിണറായി വിജയന്‍, മകള്‍...

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Maharashtra: నాందేడ్‌లో ఘోర రోడ్డు ప్రమాదం.. ట్రక్కు-టాటా మ్యాజిక్‌ ఢీ.. 9 మంది మృతి

మహారాష్ట్రలోని నాందేడ్‌లో ఘోర రోడ్డు ప్రమాదం జరిగింది. వేగంగా వస్తున్న ట్రక్కు.....

സത്യ നികേതന്‍ ഹോസ്റ്റല്‍ അപകടം; നടത്തിപ്പുകാര്‍ക്ക് അപകട മുന്നറിയിപ്പ് നല്‍കിയിരുന്നതായി തൊഴിലാളി

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹി സത്യ നികേതനില്‍ ഹോസ്റ്റല്‍ കെട്ടിടം തകരുന്നതിന് മണിക്കൂറുകള്‍ക്ക് മുമ്പ്...