6
July, 2026

A News 365Times Venture

6
Monday
July, 2026

A News 365Times Venture

"ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்" – எடப்பாடி பழனிசாமி

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தமிழக வெற்றிக் கழகம், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது.

தவெக விஜய்

ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்த பிறகே பதவியேற்பு நடத்தப்படும் என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

காங்கிரஸின் 5 உறுப்பினர்கள், கம்யூனிஸ்டுகளின் 4 உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் கூட்டணியின் பலம் 116 ஆக இருக்கிறது.

இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், திமுக கூட்டணியில் உள்ள விசிகவிடம் தவெக ஆதரவு கோரியிருக்கிறது.

இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதல்வராகவும் வேண்டும் என்ற முனைப்புடன் திராவிடக் கட்சிகள் விஜய்க்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

இந்நிலையில், “நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து சென்னை வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி தனது கட்சிகாரர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വഖഫ് ബോര്‍ഡില്‍ ഹിന്ദു അംഗങ്ങളെ നിയമിച്ച് മധ്യപ്രദേശ് സര്‍ക്കാര്‍; വഖഫ് നിയമഭേദഗതിയിലെ വിവാദ വ്യവസ്ഥ നടപ്പിലാക്കുന്ന ആദ്യ സംസ്ഥാനം

  ഭോപ്പാല്‍: ചരിത്രത്തിലാധ്യമായി വഖഫ് ബോര്‍ഡില്‍ രണ്ട് ഹിന്ദു അംഗങ്ങളെ ഉള്‍പ്പെടുത്തി...

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! – விரைவில் டெண்டர்

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு...

മുന്‍ കോളനികള്‍ ബ്രിട്ടന് നഷ്ടപരിഹാരം നല്‍കണമെന്ന് മുന്‍ ആഭ്യന്തര മന്ത്രി; ഈ രാജ്യങ്ങള്‍ വളരാന്‍ കാരണം ബ്രിട്ടനെന്നും വാദം, പ്രതിഷേധം

ലണ്ടന്‍: ബ്രിട്ടന്റെ മുന്‍ കോളനികള്‍ ബ്രിട്ടന് തിരിച്ച് നഷ്ടപരിഹാരം നല്‍കണമെന്ന് മുന്‍...