2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? – எப்போது, எவ்வளவு தெரியுமா?

Date:

இந்தியாவின் ‘பாக்கெட் ஃபிரெண்ட்லி’ டிராவல் ஆப்ஷன் என்றால், அது ‘ரயில்’ தான்.

சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை யார் வேண்டுமானாலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப எளிதாகவும், வசதியாகவும் ரயிலில் பயணம் செய்யலாம்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ரயில் டிக்கெட்டுகளின் விலை ஏற்றப்படலாம். அதற்கான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியன் ரயில்வே

ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம். மேலும், இந்த அறிவிப்பு மக்களுக்கு சுமையாகவும் மாறிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்களாம்.

ஜூலை 1-ம் தேதி வர உள்ள அறிவிப்பின் படி,

ஏ.சி கோச் பயணங்களுக்கு ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.2 விலை உயர்வு இருக்கும்.

ஏ.சி அல்லாத கோச்சுகளின் டிக்கெட்டுகளில் ஒரு கி.மீக்கு ஒரு பைசா விலை உயர்வு இருக்கும்.

புறநகர் ரயில்களின் டிக்கெட்டுகள், மாத சீசன் டிக்கெட்டுகள், செக்கண்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு 500 கி.மீ பயணம் வரைக்கும் விலை மாறுதல் கிடையாது.

இதன் மூலம், 2025 – 26 நிதியாண்டின் அடுத்த மூன்று காலாண்டுகளில்…

முதல் வகுப்பு ஏ.சி கோச்சுகள் மூலம் ரூ.9.6 கோடி,

இரண்டாம் வகுப்பு ஏ.சி கோச்சுகள் மூலம் ரூ.93.1 கோடி,

மூன்றாம் வகுப்பு ஏ.சி கோச்சுகள் மூலம் ரூ.533.8 கோடி,

நிர்வாக கோச் மூலம் ரூ.4.7 கோடி,

ஏ.சி சேர் கோச் மூலம் ரூ.56.4 கோடி,

ஸ்லீப்பர் கோச் மூலம் ரூ.292.3 கோடி

என்று மொத்தமாக ரூ.700 கோடி அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

'பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று தான் ஈரான் போர்!' – ட்ரம்ப் காட்டம்

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று...

Gold Rates: గోల్డ్ లవర్స్‌కు మళ్లీ షాక్.. నేటి బంగారం, వెండి ధరలు ఇలా!

పశ్చిమాసియా యుద్ధం కారణంగా బంగారం, వెండి ధరలు రోజుకోలాగా ఒడిదుడుకులు ఎదుర్కొంటున్నాయి....

ಲೈಂಗಿಕ ದೌರ್ಜನ್ಯ ಆರೋಪ: ಹನಿಯೂರು ಚಂದ್ರೇಗೌಡ ಬಂಧನ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,2.2026 (www.justkannada.in): ಮಹಿಳೆಯ ಮೇಲೆ ಲೈಂಗಿಕ ದೌರ್ಜನ್ಯವೆಸಗಿರುವ ಆರೋಪದ ಮೇಲೆ...