அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று – ஈரான் செய்து வரும் அணு ஆயுதத் தயாரிப்பு.
இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணமும் – இரு தரப்பிற்கும் இந்த விஷயத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாதது தான்.
இந்த நேரத்தில் ஈரான் தயாரித்து வரும் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா ஈரானை B2 பாம்பர்களை வைத்து தடுத்தது. இதை அமெரிக்கா செய்யவில்லையென்றால், ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்திருக்கும்.
இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் துண்டுகளாக சிதறி இருக்கும்.
அமெரிக்கா ஈரானுடன் போர் தொடுத்திருப்பதற்கான காரணமே – ‘பைத்தியக்காரர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது’ என்பது தான்.
ஈரான் சிதைந்து வருகிறது. அவர்களிடம் கடற்படை, விமானப் படை, ரேடார் எதுவும் இல்லை. அவர்களுடைய தலைவர்களும் இறந்துவிட்டார்கள்.
ஈரான் போர் விரைவில் முடிந்துவிடாது. விரைவில் முடிந்தால், இதே பிரச்னையை இன்னும் மூன்று ஆண்டுகளில் மீண்டும் இந்தப் பிரச்னையை சந்திக்க முடியாது” என்று பேசியுள்ளார்.





