சட்டமன்றம்: முதலவர் விஜய் பதிலுரை!
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், அரசினர் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் ஆளும் அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். அதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன். தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதில் சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், தவெக அமைச்சர் ராஜ் மோகன் தன் எக்ஸ் பக்கத்தில், “எல்லோரும் பொதுவாய் Sundayக்காக காத்திருப்பாங்க.. எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.





