12
August, 2026

A News 365Times Venture

12
Wednesday
August, 2026

A News 365Times Venture

‘சுத்தமான பெட்ரோல் உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்?’ – E20 விவகாரத்தில் பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

Date:

இந்தியாவில் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.

E20 பெட்ரோலால் வாகனங்களின் செயல்திறன் பாதிப்படைகிறது என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

இந்த விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் பதில்கள் இங்கே…

பாஜகவின் மத்திய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா:

“இந்தியா தனது மொத்த தேவையில் 20 சதவீத கச்சா எண்ணெயை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதி 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.

பிரதமர் மோடி பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதைப் பற்றிப் பேசும்போது மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஜனார்தன் மிஸ்ரா

கலப்படம் இல்லாத சுத்தமான பெட்ரோல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

சுத்தமான பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்? நாட்டில் சுத்தமான பெட்ரோலே இல்லாதபோது, அது வேறு எங்கிருந்துதான் வரும்?”

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி:

“இன்று நாட்டின் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் E20 எரிபொருள் கிடைக்கிறது.

எத்தனால் கலந்து எரிபொருளை விரும்பாதவர்கள் 100 சதவீதம் சுத்தமான பெட்ரோலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.”

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி:

“நமது உயிரி எரிபொருள் கலப்புத் திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உங்களில் சிலர் E20 பற்றியும், அதைச் சுற்றி சிலர் சர்ச்சை உருவாக்க முயல்வதைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்.

தினமும் சுமார் 6 முதல் 7 கோடி வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க்குகளுக்குச் செல்கிறார்கள். கலப்படம் என்று பார்த்தால், அது எதிலும் நடக்கலாம்.

நீங்கள் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, மண்ணெண்ணெய், டீசல் அல்லது வேறு எதிலும் கலப்படம் நடக்க வாய்ப்புள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

அனைத்துப் பரிசோதனைகளிலும் ஒரு நாளைக்கு 2,000 பெட்ரோல் பங்க்குகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார்கள்.

தினமும் 6 முதல் 7 கோடி மக்கள் வந்து செல்லும் 1,07,000 பெட்ரோல் பங்க்குகளில், வெறும் நான்கு வழக்குகளை மட்டுமே அவர்கள் கண்டறிந்தனர்.

எனவே, யாரோ ஒருவர் எதையோ அதன் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் சூழலுக்கு அப்பாற்பட்டுப் பேச முயற்சிக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘മാതൃരാജ്യം വില്‍പ്പനയ്ക്കുള്ളതല്ല’; സ്വകാര്യ സ്വത്ത് ബില്ലിനെതിരെ അര്‍ജന്റീനന്‍ തെരുവിലിറങ്ങി ആയിരങ്ങള്‍; പ്രതിഷേധം ശക്തമാക്കി ഇടത് സംഘടനകള്‍

ബ്യൂണസ് അയേഴ്‌സ്: അര്‍ജന്റീനയിലെ പ്രസിഡന്റ് ജാവിയര്‍ മിലെയുടെ സര്‍ക്കാര്‍ മുന്നോട്ടുവെച്ച സ്വകാര്യ...

YS Jagan Slams AP PPP Policy: ‘ఆంధ్రప్రదేశ్ ఫర్ సేల్’లా కొత్త PPP పాలసీ.. జగన్ తీవ్ర విమర్శలు

YS Jagan Slams AP PPP Policy: ఆంధ్రప్రదేశ్ ప్రభుత్వం తీసుకొచ్చిన...

ತಮಿಳುನಾಡಿಗೆ ನೀರು ಬಿಡದಂತೆ ಆಗ್ರಹ: ಮೈಸೂರಿನಲ್ಲಿ ರೈತರಿಂದ ಪ್ರತಿಟನೆ, ಕಾಡಾ ಕಚೇರಿಗೆ ಮುತ್ತಿಗೆ

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,12,2026 (www.justkannada.in): ತಮಿಳುನಾಡಿಗೆ ನೀರು ಹರಿಸದಂತೆ ಆಗ್ರಹಿಸಿ ಮೈಸೂರಿನಲ್ಲಿ ರೈತರು...

ഇന്ത്യയുടെ ഊര്‍ജ്ജ നയം എന്താണെന്ന് മറ്റുള്ളവര്‍ തീരുമാനിക്കേണ്ട; അമേരിക്കന്‍ കമ്പനികളെ ബഹിഷ്‌കരിക്കണമന്ന് ആര്‍.എസ്.എസ് വിഭാഗം

ന്യൂദല്‍ഹി: റഷ്യയില്‍ നിന്ന് എണ്ണ വാങ്ങുന്നതിന്റെ പേരില്‍ ഇന്ത്യയ്ക്കുമേല്‍ അമേരിക്ക ചുമത്തുന്ന...