6
August, 2026

A News 365Times Venture

6
Thursday
August, 2026

A News 365Times Venture

'என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை; இது தரங்கெட்ட அரசு!' – திருச்சியில் கொந்தளித்த உதயநிதி!

Date:

திருச்சி செங்கிப்பட்டிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

Udhayanidhi

உதயநிதி பேசியதாவது, ‘தவெக அரசும் முதல்வரும் எல்லாவற்றுக்கும் ஒரு டைவர்சன் யுக்தியை கையாள்கின்றனர். நான் போராட்டத்தில் பேசியது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நாளை சட்டமன்றத்தில் அந்த விவகாரம் பேசுபொருளாகும் என்பதால் நான் பேசாததை பேசியதாக திரித்து பரவ வைத்து காவல்துறை என்னை கைது செய்ய வந்தது.

நான் முழு ஒத்துழைப்பை கொடுத்தேன். என்னை முடக்க பார்த்தார்கள். நாங்கள் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் எனக் கூறி கைதானேன். நீதிமன்றத்தில் போய் கைது செய்யவில்லை விசாரணைக்குதான் அழைத்து சென்றோம் எனக் கூறியிருக்கின்றனர். தஞ்சாவூருக்கு அழைத்து செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அலைக்கழித்தனர். நான் எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை. பெண்களை தவறான நோக்கத்தில் பேசவேண்டும் என நினைக்கமாட்டேன். என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கென குடும்பம் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்களையும் தாயாக தங்கையாக பார்க்கிறேன். என்னுடைய கைதை கண்டித்து உடன்பிறப்புகள் பலரும் போராடி கைதாகியிருக்கின்றனர்.

Udhayanidhi
Udhayanidhi

அவர்களின் அன்புக்கு நன்றி. அவர்களை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும். சில தலைவர்கள் நான் பேசியதை தவறாக புரிந்துகொண்டு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அதுதான் வருத்தம். நான் எந்த இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை. காவிரி தண்ணீர் வேண்டுமென ஒற்றை அர்த்தத்தில்தான் பேசினேன். இந்த தரங்கெட்ட அரசின் கைதுக்கெல்லாம் பயப்படமாட்டேன். இன்னும் 100 தடவை கூட பேசுவேன். மீண்டும் மீண்டும் பேசுவேன்’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നാളെ ആല്‍ഫയും ബീറ്റയും വരും! ജന്തര്‍ മന്ദറിലെ പ്രതിഷേധക്കാര്‍ക്കെതിരായ കേസുകള്‍ പിന്‍വലിക്കരുത്: സുപ്രീം കോടതിയില്‍ പൊതുതാത്പര്യ ഹരജി

ന്യൂദല്‍ഹി: സി.ജെ.പിയുടെ നേതൃത്വത്തില്‍ ജന്തര്‍ മന്ദറില്‍ നടന്ന വിദ്യാര്‍ത്ഥി പ്രക്ഷോഭത്തില്‍ പങ്കെടുത്തവര്‍ക്കെതിരായ...

மீனாட்சியம்மன் கோயில் கோயில் நில விவகாரம்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது

மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா...

ಸಚಿವ ಬಿ.ನಾಗೇಂದ್ರ ರಾಜೀನಾಮೆ ಪಡೆಯದೇ ಸದನ ನಡೆಯಲು ನಾವು ಬಿಡಲ್ಲ- ಛಲವಾದಿ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,5,2026 (www.justkannada.in): ವಾಲ್ಮೀಕಿ ನಿಗಮದ ಹಗರಣದಲ್ಲಿ ಕಳಂಕಿತರಾಗಿದ್ದ ಬಿ.ನಾಗೇಂದ್ರಗೆ ಸಚಿವ...