9
July, 2026

A News 365Times Venture

9
Thursday
July, 2026

A News 365Times Venture

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை – வேட்டி: முதல்வருக்கு நன்றி" – நெசவாளர்கள் கூட்டமைப்பு

Date:

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வரவிருக்கும் 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்காகத் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் புத்தாடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இம்முறை ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம், புதிய அதிக உறுதி மற்றும் தரத்துடன் ஆடைகள் நெய்யப்பட உள்ளன.

கைத்தறி நெசவாளர்கள்

இத்திட்டத்தின் கீழ் வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டருடன் கூடிய 1,77,64,000 சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் கூடிய புதிய வடிவமைப்பிலான 1,77,22,000 வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 642 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்களுக்கும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ബീഹാറില്‍ മുസ്‌ലിം യുവതിയെ നിര്‍ബന്ധിച്ച് സിന്ദൂരമണിയിച്ചു; ബലമായി നിഖാബ് അഴിപ്പിച്ച് ഹിന്ദുത്വര്‍

നവാഡ: ബീഹാറിലെ നവാഡ ജില്ലയില്‍ വെച്ച് മുസ്‌ലിം യുവതിയെയും അവരുടെ സുഹൃത്തായ...

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கொப்பரை தேங்காய் மற்றும் தோட்டாபுரி...

AP High Court: రుషికొండ భవనాల వినియోగంపై విచారణ.. హైకోర్టు కీలక ఆదేశాలు

AP High Court: విశాఖపట్నంలోని రుషికొండ భవనాల అంశంపై ఆంధ్రప్రదేశ్ హైకోర్టులో...

ಕೊಡಗು ಜಿಲ್ಲೆಯ ಜ್ವಲಂತ ಭೂ ಸಮಸ್ಯೆಗಳ ಶಾಶ್ವತ ಪರಿಹಾರಕ್ಕೆ ಸರ್ಕಾರ ತುರ್ತು ಕ್ರಮ ಕೈಗೊಳ್ಳಲಿ- ಸಂಸದ ಯದುವೀರ್

ಮೈಸೂರು,ಜುಲೈ,7,2026 (www.justkannada.in): ಕೊಡಗು ಜಿಲ್ಲೆಯ ಜ್ವಲಂತ ಭೂ ಸಮಸ್ಯೆಗಳ ಶಾಶ್ವತ...