26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

சிறு குறு, பெரு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு! – யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

Date:

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

வேளாண்மை

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி விவரங்கள்

கடன் தொகை குறு விவசாயிக்கான தள்ளுபடி கடன் தொகை (ரூபாயில்)சிறு விவசாயிக்கான தள்ளுபடி கடன் தொகை (ரூபாயில்)50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

50,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் (100 சதவீதம்) முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே அளவில் (50,000 ரூபாய் வரை) கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

50,001 முதல் 60,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 50,001 முதல் 60,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

கோப்புப்படம்
கூட்டுறவு வங்கி

60,001 முதல் 70,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 60,001 முதல் 70,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 15,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

70,001 முதல் 80,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 70,001 முதல் 80,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

80,001 முதல் 90,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 80,001 முதல் 90,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

90,001 முதல் 1,00,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 90,001 முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

தவெக விஜய்
தவெக விஜய்

1,00,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 1,00,000 ரூபாய்க்குக் கூடுதலாகப் பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதேபோல் 1,00,000 ரூபாய்க்குக் மேல் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள்:

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಚಿವ ಸ್ಥಾನ ತ್ಯಾಗ ವಿಚಾರ: ಹೈಕಮಾಂಡ್ ತೆಗೆದುಕೊಳ್ಳುವ ತೀರ್ಮಾನಕ್ಕೆ ಬದ್ದ- ಸಚಿವ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,25,2026 (www.justkannada.in): ಸಚಿವ ಸ್ಥಾನ ತ್ಯಾಗ ಮಾಡುವ ವಿಚಾರ ಸಂಬಂಧ...

പ്രത്യേക ശൗചാലയങ്ങളും സാനിറ്ററി നാപ്ക്കിനും ലഭിക്കാത്തതിന്റെ പേരില്‍ ഒരു പെണ്‍കുട്ടിയും പഠിത്തം നിര്‍ത്തേണ്ടി വരരുത്: സുപ്രീം കോടതി

ന്യൂദല്‍ഹി: സ്‌കൂളുകളില്‍ പ്രത്യേക ശൗചാലയങ്ങളും സാനിറ്ററി നാപ്ക്കിനും ലഭിക്കാത്തതിന്റെ പേരില്‍ പെണ്‍കുട്ടികള്‍...

Master Plan: ఊరి జనాల్ని నమ్మించి.. మాస్టర్ స్కెచ్ వేశారు.. రూ.కోటితో పరార్..

జనం అత్యాశనే వారికి పెట్టుబడి.. అదే వారి ఆయుధం.. తక్కువ ధరకు...