20
May, 2026

A News 365Times Venture

20
Wednesday
May, 2026

A News 365Times Venture

10 வயதில் பிரிட்டன் பயணம், 23 வயதில் மேயர்: சரித்திரம் படைத்த இந்திய வம்சாவளி இளைஞர் துஷார் குமார்!

Date:

ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் பிறந்து, புதியதொரு தேசத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, வெறும் 23 வயதில், பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் மேயர் பதவியை எட்டி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்  துஷார் குமார்.

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பாரம்பரியமிக்க ‘எல்ஸ்ட்ரீ மற்றும் போரஹாம்வுட்’ (Elstree and Borehamwood) நகரத்தின் புதிய மேயராக அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ள இந்தச் செய்தி, உலகெங்கும் வாழும் இந்தியர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

துஷார் குமார் தனது 10 வது வயதில், அதாவது 2013-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார். புதிய சூழல், புதிய மனிதர்கள் என எல்லாமே சவாலாக இருந்தாலும், மிகக் குறுகிய காலத்திலேயே அங்கிருக்கும் கலாசாரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். லண்டனின் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்துப் பட்டம் பெற்ற இவருக்கு, மாணவர் பருவத்திலிருந்தே சமூக சேவையிலும் அரசியல் ஆளுமையிலும் அதிக ஆர்வம் இருந்துள்ளது.

 கடந்த 2023-ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் சார்பில் உள்ளாட்சி மன்ற கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மிகக் குறுகிய காலத்திலேயே தனது அர்ப்பணிப்பான செயல்பாடுகளால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஓராண்டு காலம் துணை மேயராகப் பணியாற்றிப் பக்குவப்பட்ட துஷார் குமார், தற்போது நகரின் மிக உயரிய மேயர் பதவியை எட்டியுள்ளார்.

மேலும், தன்னைப் போன்ற பல இளம் தலைமுறையினரும், குறிப்பாகப் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட இளைஞர்களும் பொதுச் சேவைகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்பதே தனது முக்கிய இலக்கு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் பிரிட்டனுக்குச் சென்று, இன்று அந்த நாட்டின் ஒரு நகரத்தையே வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ள துஷார் குமாரின் இந்த அசாத்திய வெற்றிப்பயணம், கனவுகளைத் துரத்தும் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம் என்பதில் சந்தேகமில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഉമര്‍ ഖാലിദിന്റെ ജാമ്യാപേക്ഷ ദല്‍ഹി കോടതി തള്ളി

ന്യൂദല്‍ഹി: പൗരത്വ സമരകാലത്തെ കേസുകളില്‍ വിചാരണ തടവില്‍ കഴിയുന്ന ഉമര്‍ ഖാലിദിന്റെ...

AP Heatwave Alert: ఏపీలో భగ్గుమంటున్న ఎండలు.. రికార్డు స్థాయిలో ఉష్ణోగ్రతలు..

AP Heatwave Alert: ఆంధ్రప్రదేశ్‌లో ఎండల తీవ్రత రోజురోజుకు పెరుగుతోందని రాష్ట్ర...

ಹೈಕಮಾಂಡ್ ಸಿಎಂ, ಡಿಸಿಎಂ ಕರೆಸಿ ಮಾತನಾಡ್ತಾರೆ, ನಮ್ಮನ್ನಲ್ಲ- ಸಚಿವ ಸತೀಶ್ ಜಾರಕಿಹೊಳಿ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,19,2026 (www.justkannada.in):  ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ವಿಚಾರ ಚರ್ಚೆಯಾಗುತ್ತಿದ್ದು ಈ ಮಧ್ಯೆ...