15
May, 2026

A News 365Times Venture

15
Friday
May, 2026

A News 365Times Venture

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி… வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

Date:

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் விளக்கம் பெற்று வெளியிட்டோம். இந்த செய்தி நேற்று புதன்கிழமை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. பழங்குடி மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநில பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரையிடம் கலந்தலோசித்தார். இதனடிப்படையில் உடனே பழங்குடி நல இயக்குநர் அண்ணாதுரை மண் திட்டில் வாழும் மலசர் பழங்குடி மக்கள் 16 குடும்பங்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் 5,73,000 ரூபாய் மதிப்பில் வீடுகளை கட்டி தருவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார்.

வீடு கட்டுவதற்கான ஆணை

இது குறித்து  பழங்குடியின நல ஆணையத்தின்  இயக்குநர் அண்ணாதுரையிடம் பேசியபோது, ” தொடர்ச்சியாக பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும் பளியர், முதுவர், காடர், மலசர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். கடந்த வருடம் 2500 வீடுகள் வரை கட்டப்பட்டது. இந்த வருடம் தற்போது வரை ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதோடு பழங்குடியின மக்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை சேகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றுகிறோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇതാണ് ഉത്തരവാദിത്തമുള്ള ഭരണം; എല്ലായിടത്തും കൂടി, എന്നാല്‍ ഇവിടെ അത്രയ്‌ക്കൊന്നുമില്ലല്ലോ; ഇന്ധനവിലവര്‍ധനവിനെ ന്യായീകരിച്ച് റിജിജു

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്ത് ഇന്ധനവില വര്‍ധിപ്പിച്ച കേന്ദ്ര സര്‍ക്കാര്‍ തീരുമാനത്തെ ന്യായീകരിച്ച് കേന്ദ്രമന്ത്രി...

த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள்...

Gujarat: జానపద గాయకుడిపై లక్షల్లో నోట్ల వర్షం.. వీడియో వైరల్

ప్రస్తుతం భారత్‌లోనూ.. అంతర్జాతీయంగా ఆర్థిక సంక్షోభం కొనసాగుతోంది. పశ్చిమాసియా యుద్ధం కారణంగా...

ಸೇತುವೆ ಮೇಲಿಂದ ಉರುಳಿ ಬಿದ್ದ ಟ್ರ್ಯಾಕ್ಟರ್ ಒಂದೇ ಕುಟುಂಬದ 6 ಮಂದಿ ಸಾವು

ಕೊಪ್ಪಳ, ಮೇ,15,2026 (www.justkannada.in):  ಹಿಂದಿನಿಂದ ಟ್ಯಾಂಕರ್ ಡಿಕ್ಕಿಯಾದ ಪರಿಣಾಮ ಸೇತುವೆ...