19
March, 2025

A News 365Times Venture

19
Wednesday
March, 2025

A News 365Times Venture

Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு

Date:

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் என 104 பேரை அமெரிக்க ராணுவம் இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தியது.

ட்ரம்ப் அதிபரான பிறகு…

அதேசமயம், இந்த நடவடிக்கை எதோ ட்ரம்ப் பதவியேற்ற பிறகு நடக்கும் விஷயம் அல்ல. கடந்த பைடன் ஆட்சி, அதற்கு முந்தைய ட்ரம்ப் ஆட்சி அதற்கும் முந்தைய அதிபர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து இந்த நடவடிக்கையை அமெரிக்க மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 15,756 இந்தியர்களை அமெரிக்கா திருப்பியனுப்பியிருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

ராஜ்ய சபாவில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட தரவுகளின்படி,

2009: 734

2010: 799

2011: 597

2012: 530

2013: 515

2014: 591

2015: 708

இந்தியர்கள்

2016: 1,303

2017: 1,024

2018: 1,180

2019: 2,042

2020: 1,889

2021: 805

2022: 862

2023: 617

2024: 1,368

2025 (பிப்ரவரி 5-ம் தேதி வரை): 104

என 2009 முதல் மொத்தம் 15,756 இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக திருப்பியனுப்பப்பட்டிருக்கின்றனர். மேலும், இறுதி வெளியேற்ற உத்தரவுடன் 487 இந்தியர்கள் இருக்கின்றனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪಿ.ಯು. ಉಪನ್ಯಾಸಕರ ಸಂಘದ ಅಧ್ಯಕ್ಷರಿಂದ ನಕಲಿ ದಾಖಲೆ ಸಲ್ಲಿಕೆ ಆರೋಪ.?

ಮೈಸೂರು, ಮಾ.18, 2025:  ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯ ಪದವಿ ಪೂರ್ವ ಕಾಲೇಜುಗಳ...

നിയമവിരുദ്ധമായി പ്രവര്‍ത്തിക്കുന്നെന്ന് ആരോപിച്ച് ഉത്തരാഖണ്ഡിലെ 84 മദ്രസകള്‍ അടച്ചുപൂട്ടി ബി.ജെ.പി സര്‍ക്കാര്‍

ഡെറാഡൂണ്‍: നിയമവിരുദ്ധമായി പ്രവര്‍ത്തിക്കുന്നുവെന്ന് ആരോപിച്ച് ഉത്തരാഖണ്ഡിലെ 84 മദ്രസകള്‍ അടച്ചുപൂട്ടി ബി.ജെ.പി...

`ஊதியம் கிடையாது' – போராட்டம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள்...

Atreyapuram Pootharekulu: ఆత్రేయపురం కల్తీ నెయ్యి ఘటన.. ల్యాబ్ పరిశీలనలో వెలుగులోకి కీలక వాస్తవాలు!

అంబేద్కర్ కోనసీమ జిల్లా ఆత్రేయపురంలోని కొన్ని పూతరేకుల దుకాణాల్లో వాడింది కల్తీ...