2
September, 2026

A News 365Times Venture

2
Wednesday
September, 2026

A News 365Times Venture

US: இந்தியர்களின் Green Card கனவுக்கு பெரிய தடை? – 179 ஆண்டுகள் வரை காத்திருப்பா?

Date:

அமெரிக்காவில் வேலை அடிப்படையில் (Employment-based) கிரீன் கார்டு (Green Card) பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு நீண்ட காலக் காத்திருப்பு ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், EB-2 பிரிவில் (Advanced degree அல்லது exceptional ability கொண்ட professionals) புதிதாக விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்குக் கிரீன் கார்டு கிடைக்க 179 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை அடிப்படையிலான கிரீன் கார்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பொதுவாக 7 சதவீத வரம்பு (Country Cap) உள்ளது. அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கும் இந்தியத் தொழில்முறை பணியாளர்களின் (Professionals) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விண்ணப்பங்கள் சேர்ந்து backlog தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Visa, Green Card

தற்போதைய கணிப்பின்படி, இந்தியர்களுக்கு EB-1 பிரிவில் சுமார் 5 ஆண்டுகள், EB-2 பிரிவில் 179 ஆண்டுகள், EB-3 பிரிவில் 38 ஆண்டுகள் வரை காத்திருப்பு இருக்கலாம். EB-1 (மிக உயர்ந்த திறமை அல்லது சாதனை கொண்டவர்கள்), EB-2 (Advanced degree அல்லது exceptional ability கொண்ட professionals) மற்றும் EB-3 (Bachelor’s degree professionals மற்றும் skilled workers போன்றவர்கள்) பிரிவுகளைச் சேர்த்து, இந்தியத் தொழில்முறை பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் நிலுவைப் பட்டியலில் (Backlog) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 179 ஆண்டுகள் என்பது உறுதியான காத்திருப்பு காலம் அல்ல. தற்போதைய குடியேற்ற விதிமுறைகள் (Immigration Rules), விசா வரம்புகள் (Visa Limits) மற்றும் நிலுவைப் பட்டியல் தொடர்ந்து நீடிக்கும் என்ற அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கணிப்பு மட்டுமே. எதிர்காலத்தில் விதிமுறைகள் அல்லது விசா எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், இந்த காத்திருப்பு காலமும் மாறக்கூடும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എസ്.ഐ.ആര്‍ റദ്ദാക്കും വരെ കര്‍ണാടക ഉറങ്ങില്ല; പ്രകാശ് രാജ്; വോട്ടവകാശം തട്ടിയെടുക്കാന്‍ ആര്‍ക്കും അവകാശമില്ലെന്ന് കിഷോര്‍

ബെംഗളൂരു: തീവ്ര വോട്ടര്‍ പട്ടിക പരിഷ്‌കരണം (എസ്.ഐ.ആര്‍) റദ്ദാക്കണമെന്നും അത് റദ്ദാക്കുന്നതുവരെ...

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்....

CM Revanth Reddy: ఈ 1000 రోజుల్లో కేసీఆర్ ఒక్కసారైనా జనం కోసం బయటకు వచ్చారా..?: సీఎం రేవంత్‌రెడ్డి

కాంగ్రెస్ ప్రభుత్వం అధికారంలోకి వచ్చిన ఈ 1,000 రోజుల పాలనలో మాజీ...