14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" – ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

Date:

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மசிஹ் அமர்வில் இந்த வழக்கை விசாரித்தனர். 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த வன்முறை சம்பவம் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு வலுவாக மறுப்பு தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்

அந்த வன்முறைக்குப் பிறகு 2000 ச.கி.மீ இடத்தை சீனா ஆக்கிரமித்ததாகவும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கம் ‘சரணடைந்துவிட்டதாகவும்’ ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். அவர்மீது ராணுவத்தை இழிவுபடுத்தியதாக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

“2000 ச.கி.மீ இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இது போலப் பேச மாட்டீர்கள்” என்றார் நீதிபதி தத்தா.

“நீங்கள் அங்கே இருந்தீர்களா, உங்களிடம் நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி காந்தி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்காவிட்டால்… அவர் எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதி தத்தா, “எனில் நீங்கள் இந்த விஷயங்களை ஏன் நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை?” என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

பின்னர் வழக்கை ரத்து செய்யக் கோரிய ராகுல் காந்தியின் மனுவுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கியது நீதிமன்றம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നെതര്‍ലാന്‍ഡ്‌സിലെ സിനഗോഗ് തീവെപ്പിന് പിന്നാലെ ജൂത സ്‌കൂളില്‍ സ്‌ഫോടനം; ഭീരുത്വമെന്ന് ആംസ്റ്റര്‍ഡാം മേയര്‍

ആംസ്റ്റര്‍ഡാം: ആംസ്റ്റര്‍ഡാമിലെ ജൂത സ്‌കൂളില്‍ സ്‌ഫോടനം. ശനിയാഴ്ച രാവിലെയാണ് സ്‌ഫോടനമുണ്ടായതെന്ന് റോയിട്ടേഴ്‌സ്...

“கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" – அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

Milk Purity: మీరు తాగే పాలు అసలైనవేనా? కల్తీ పాలను గుర్తించే 5 సింపుల్ పద్ధతులు ఇవే!

Milk Purity: చిన్న పిల్లల నుంచి వృద్ధుల వరకు అందరికీ అవసరమైన...

4,824 ಕೋಟಿ ರೂ. ಮೊತ್ತದ ಬಂಡವಾಳ ಹೂಡಿಕೆಗೆ ಸಮ್ಮತಿ: ಸಚಿವ ಎಂ. ಬಿ. ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in): ವಿಜಯಪುರ, ಬಾಗಲಕೋಟೆ, ಚಿತ್ರದುರ್ಗ, ಕೋಲಾರ, ರಾಮನಗರ ಸೇರಿದಂತೆ ...