16
August, 2026

A News 365Times Venture

16
Sunday
August, 2026

A News 365Times Venture

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

Date:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு `பெரியார் குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பெரியார் ஆதரவாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர்.

பெரியார்

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெரியார் குறித்து சர்சையாகவே பேசி வருகிறார் சீமான். ஈரோடு இடைத்தேர்தலிலும் பெரியார் மீதான விமர்சனத்தையே அவர் பிரதானமாக முன்னிறுத்தி, பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய படப்பிடிப்புக்கான ஏற்பாடு தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்த பார்த்திபன், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, `நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சித்துக் கொண்டிருக்கிறாரே ?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சீமான்
சீமான்

அதற்கு பதிலளித்த பார்த்திபன், “பெரியாரை நீக்கிவிட்டு இங்கு நமக்கு அரசியல் என்று இல்லை. அதனால்தான் அவரும் பெரியாரை வைத்து அந்த அரசியலை செய்கிறார். அது அவருக்கு ப்ளஸ்சா மைனசா என்பது வேறு விஷயம். இப்போதும் நாம் அரசியல் செய்வதற்கு பெரியார் தேவைப்படுகிறார் இல்லையா? அப்படியென்றால் அவர் எவ்வளவு பெரிய பெரியார் ?” என்று பதிலளித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" – மு.க. ஸ்டாலின்

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு...

Gold Coins: మురికి కాలువలో బంగారు నాణేలు.. తవ్వుతున్న కొద్దీ దొరుకుతూనే ఉన్నాయ్..

బెల్జియంలోని సింట్-గిల్లిస్-డెండర్మోండేలో ఒక సాధారణ డ్రైనేజీ పైప్‌లైన్ తవ్వకం పనుల్లో నిమగ్నమైన...

പി.എം ശ്രീ നിലപാടിൽ മാറ്റമില്ല; അറബിക്കടലിനപ്പുറം അഴുക്കുചാലുണ്ടെങ്കിൽ അവിടെ എറിയണം: കെ.എം. ഷാജി

കണ്ണൂർ: പി.എം ശ്രീ പദ്ധതിക്കെതിരായ തന്റെ രാഷ്ട്രീയ നിലപാടിൽ മാറ്റമില്ലെന്ന് കെ.എം....