தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான்.
யாரை தீய சக்தி என தவெக சொன்னதோ அந்தத் தீய சக்தியின் ஆதரவோடுதான் ஆட்சி நடந்து வருகிறது. நாம் நினைத்திருந்தால் விஜய்யைப் பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி கிடையாது தேமுதிக.
புதிய ஒரு கட்சிக்கு 6 மாத காலம் வாய்ப்புதர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நிலைமை அப்படி இல்லை” என்று பேசியிருக்கிறார்.





