தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.
மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள்.
4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தான் வாக்களித்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சிம்ரன் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாடகங்களைத் தவிர்த்து யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம்.
இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல. நாம் வாக்களிக்கும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது எனது உரிமை மட்டுமல்ல, அது எனது கடமையும்கூட” என்று பதிவிட்டிருக்கிறார்.





