26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

"சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் இதுதான் நிலைமை" – தவெக நிர்மல்குமார் பேட்டி

Date:

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருந்தது. உயர் நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் காவல்துறையின் SIT குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஆனால், இந்த கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றச் சொல்லியும் எஸ்.ஐ.டி விசாரணைக்கு தடை கோரியும் தவெக தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Imperfect Show

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கும் தவெக விஜய், “நீதி வெல்லும்” என ஒற்றைச் சொல்லில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யை சந்தித்துவிட்டு வந்த தவெக மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், “இது மக்களுக்கான தீர்ப்பு. 41பேர் இந்த விஷியத்தில் இவ்வளவு மோசமான அரசியலை செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எங்கள் கட்சியில் தலைவர் விஜய் உட்பட எல்லாரும் சாமானியர்கள். சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவெக நிர்மல்குமார்
தவெக நிர்மல்குமார்

இந்த துயர சம்பவத்தில் எவ்வளவு கட்டுக்கதைகள், வெறுப்புகளை இந்த திமுக அரசு பரப்பியது என்று மக்களுக்குத் தெரியும். உண்மை வெளிச்சத்திற்கு வரும், தமிழக மக்களுக்கு நடந்த உண்மை விரைவில் தெரிய வரும். விரைவில் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എസ്.ഐ.ആര്‍ ഒരുവര്‍ഷം പിന്നിട്ടപ്പോള്‍ വോട്ടര്‍ പട്ടികയില്‍ നിന്ന് പുറത്താക്കിയത് ആറ് കോടിയോളം വോട്ടര്‍മാരെ

ന്യൂദല്‍ഹി: രാജ്യത്തെ തീവ്ര വോട്ടര്‍ പട്ടിക പുനപരിശോധന (എസ്.ഐ.ആര്‍) ഒരു വര്‍ഷം...

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...

Saikrishna Lockup Death: సాయికృష్ణ లాకప్ డెత్ కేసులో సిట్ దూకుడు.. మరో ఇద్దరు పోలీసుల కోసం గాలింపు!

విజయవాడలో సంచలనం సృష్టించిన సాయికృష్ణ లాకప్ డెత్ కేసు దర్యాప్తును ప్రత్యేక...

ಟೌನ್ ಶಿಪ್ ಹೆಸರಿನಲ್ಲಿ ರೈತರಿಂದ ಭೂಮಿ ಕಸಿದುಕೊಳ್ಳುವುದು ತಪ್ಪು- ಪ್ರತಾಪ್ ಸಿಂಹ

ಹಾಸನ,ಜೂನ್,26,2026 (www.justkannada.in):  ಬಿಡದಿಯ ಟೌನ್ ಶಿಪ್ ನಿರ್ಮಾಣ ವಿಚಾರ ಜಟಾಪಟಿ...