9
February, 2026

A News 365Times Venture

9
Monday
February, 2026

A News 365Times Venture

ஆ.ராசா திறந்துவைத்த பஸ் ஸ்டாப்; `கட்டுமான செலவை விட விளம்பர செலவு அதிகம்போல…'- எழுந்த விமர்சனம்!

Date:

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து கட்டப்பட்டிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது ‌. பேருந்துக்காக மழையிலும் குளிரிலும் நோயாளிகள் வெட்டவெளியில் காத்துக்கிடக்க வேண்டிய துயரம் தொடர்ந்து வந்தது.

பயணிகள் நிழற்குடை

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நிழற்குடை கட்டித் தரப்படும் என நீலகிரி எம்.பி. ஆ.‌ராசா தரப்பில் அறிவிப்பு வெளியானது . மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள பட்ஃபயர் பகுதியில் ஊட்டி- கூடலூர் சாலையின் இரு மருங்கிலும்‌ இரண்டு யணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன. தலா 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் பயணியர் நிழற்குடைகளை நீலகிரி எம்.பி. ஆ. ராசா ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் முதல் அரசு கொறடா வரை பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

தகரம் மாதிரியான பொருளைக் கொண்டு மூன்று பக்க சுற்றுச்சவர் மற்றும் ஒற்றை கூரை அமைக்க தலா 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் செலவானதா என மக்கள் பலரும் கேள்வி எழுப்புவதுடன், கட்டுமான செலவை விட திறப்பு விழா உள்ளிட்ட விளம்பர செலவு அதிகம் போல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பயணிகள் நிழற்குடை

இந்த சர்ச்சை குறித்து பதில் அளித்த பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ரமேஷ் , ” 2023 – 2024 – ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் பகுதியில் 5.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதைவிட கூடுதல் வசதிகளுடன் தற்போதைய 2025- 2026 – ம் ஆண்டு 6 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நல்ல தரத்தில் தான் கட்டப்பட்டுள்ளது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಎ.ಆರ್.ಎ.ಐ. ಸ್ಥಾವರಕ್ಕೆ ಮಂಡ್ಯ ಜಿಲ್ಲೆಯಲ್ಲಿ ಭೂಮಿ ಲಭ್ಯ: ಎಚ್ಡಿಕೆಗೆ ಎಂ ಬಿ ಪಾಟೀಲ ಪತ್ರ

  ಬೆಂಗಳೂರು ಫೆ.೦೯,೨೦೨೬ : ದೇಶದ ಪ್ರಪ್ರಥಮ ನಿರ್ಮಾಣ ಕಾಮಗಾರಿ ಮತ್ತು...

നരവനെയുടെ പുസ്തകം പ്രചരിപ്പിക്കുന്നതിനെതിരെ കേസെടുത്ത് ദല്‍ഹി പൊലീസ്

ന്യൂദല്‍ഹി: കരസേനാ മുന്‍ മേധാവി ജനറല്‍ എം.എ നരവനെയുടെ ‘ഫോര്‍ സ്റ്റാര്‍സ്...

OPS: '130 எம்.எல்.ஏக்கள் வருவார்கள்’ டு தனிமரம்! – சரிந்த ஓ.பி.எஸ் சாம்ராஜ்யம்

`அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்காக யாரும் அதிகாரத்துக்கு வருவதில்லை!' ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம்...

Tragedy : పెళ్లి వేడుకలో విషాదం.. స్విమ్మింగ్ పూల్‌లో పడి బాలుడి మృతి..

హైదరాబాద్ శివార్లలోని చిలుకూరు పరిధిలో గల ఒక రిసార్ట్‌లో ఘోర విషాదం...