9
February, 2026

A News 365Times Venture

9
Monday
February, 2026

A News 365Times Venture

'சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா; பொன்முடியும் செந்தில் பாலாஜியும்..!'- நெல்லையில் அமித் ஷா

Date:

நெல்லை மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று (ஆகஸ்ட் 22) முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லை என்று வருந்துகிறேன்.

மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவர் பாஜக-விற்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார்.

பூத் கமிட்டி மாநாடு

தமிழகத்தைச் சேந்த சி.பி.ராதகிருஷ்ணன் அடுத்த மாநிலங்களவைக் கூட்டத்தில் சபாநாயகராக இருப்பார். தமிழ் மண், மக்கள், மொழி மீது பிரதமர் மோடி பற்றுக்கொண்டிருக்கிறார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளின் முதுகெலும்பை முறித்துக்காட்டியவர் பிரதமர். நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா கொண்டு வரப்பட்டது.

பிரதமர்கள், அமைச்சர்கள், குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என்று அந்த மசோதா கூறுகிறது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் சிறை சென்றாலும் பதவியில் நீடிக்கின்றனர். சிறை சென்றவர்கள் பதவியில் நீடிக்கலாமா? இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின் கருப்பு சட்டம் என்று இந்த மசோதாவைக் கூறுகிறார்.

பூத் கமிட்டி மாநாடு
பூத் கமிட்டி மாநாடு

தமிழ் மக்களை முன்னேற்றுவதற்கானக் கூட்டணிதான் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். திமுகவின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவது தான். நான் சொல்கிறேன் ஒரே நாளும் உதயநிதி முதல்வராக முடியாது. அதேபோல ராகுல் காந்தி பிரதமராக முடியாது. திமுக-வை தமிழகத்தில் வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

OPS: '130 எம்.எல்.ஏக்கள் வருவார்கள்’ டு தனிமரம்! – சரிந்த ஓ.பி.எஸ் சாம்ராஜ்யம்

`அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்காக யாரும் அதிகாரத்துக்கு வருவதில்லை!' ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம்...

Tragedy : పెళ్లి వేడుకలో విషాదం.. స్విమ్మింగ్ పూల్‌లో పడి బాలుడి మృతి..

హైదరాబాద్ శివార్లలోని చిలుకూరు పరిధిలో గల ఒక రిసార్ట్‌లో ఘోర విషాదం...

മുസ്‌ലിം ന്യൂനപക്ഷങ്ങളെ നിരന്തരം അപരവത്കരിക്കുന്ന ഹിമന്തയെ നിലയ്ക്ക് നിര്‍ത്താന്‍ ബി.ജെ.പിക്ക് ത്രാണിയില്ല: മുഖ്യമന്ത്രി

തിരുവനന്തപുരം: അസം മുഖ്യമന്ത്രി ഹിമന്ത ബിശ്വ ശര്‍മ മുസ്‌ലിം വംശഹത്യക്ക് പരസ്യമായി...