30
August, 2026

A News 365Times Venture

30
Sunday
August, 2026

A News 365Times Venture

தென்காசி: கரடி தாக்கி மூவர் காயம்; பணிக்குச் செல்ல விவசாயிகள் அச்சம்; பிடிக்கும் பணியில் வனத்துறை

Date:

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது புளியங்குடி. இந்தப் பகுதியில் யானை, காட்டுப் பன்றி எனக் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதும், அதனை மக்கள் மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடிப்பதும் போன்ற வனவிலங்கு மனித மோதல்கள் நிகழ்ந்து வந்தன.

தற்போது கரடியும் ஊருக்குள் வந்து மனிதர்களைத் தாக்கத் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று மலையடிவாரப் பகுதியில் விவசாயப் பணிக்குச் சென்ற மூன்று பெண்களை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கரடி

மலைப்பகுதியிலிருந்து கரடி ஊருக்குள் வந்ததால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயப் பணிக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் நல்லதம்பி உத்தரவின் பெயரில் வனத்துறையினர் கரடியைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கரடி நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். தொடர்ந்து கரடியைப் பிடிப்பதற்குக் கூண்டுகள் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனர். கரடியை நடமாட்டத்தைக் கண்டறியக்கூடிய வகையிலும் கண்காணிப்பு கேமராக்களையும் தற்போது வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ದಸರಾ ಆನೆಗಳ ವೀಕ್ಷಣೆಗೆ ಟಿಕೆಟ್ ಇಲ್ಲ: ಅರಣ್ಯ ಇಲಾಖೆ ಸ್ಪಷ್ಟನೆ

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,29,2026 (www.justkannada.in):  2026ರ ದಸರಾ ಮಹೋತ್ಸವದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ದಸರಾ ಗಜಪಡೆ...

‘ഞാന്‍ മാധ്യമങ്ങളെ ഭീഷണിപ്പെടുത്തുന്നില്ല, പക്ഷേ അവര്‍ മാപ്പ് പറയണം, അല്ലെങ്കില്‍…’; ബംഗാളി പത്രത്തിനെതിരെ സുവേന്ദു

കൊല്‍ക്കത്ത: ജാദവ്പൂര്‍ സര്‍വകലാശാലയിലുണ്ടായ ഒരു അക്രമവുമായി ബന്ധപ്പെട്ട വാര്‍ത്തയില്‍ ‘കാവി ഗുണ്ടായിസം,’...

65 பில்லியன் பேரல் எண்ணெய்… டிரம்பின் “உலகின் மிகப்பெரிய ஒப்பந்தம்” பின்னணி என்ன?

அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக்...

ఇదేం ఫోన్ బాబోయ్.. బ్లాక్‌ అండ్‌ వైట్‌ నుంచి కలర్‌లోకి మారిపోతుంది..! Hisense A10 e-ink లాంచ్.!

Hisense A10 e-ink: స్మార్ట్‌ఫోన్ మార్కెట్‌లో ఎప్పటికప్పుడు కొత్త ప్రయోగాలు జరుగుతూనే...