2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

'சிந்தூர்: அனுப்பியவர்களை கொன்றது; மஹாதேவ்: தாக்குதல் நடத்தியவர்களைக் கொன்றது’ – அமித் ஷா உரை

Date:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் நேற்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தனர்.

இன்று அந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசிவருகிறார்.

“நேற்று நடந்த ஆபரேஷன் மஹாதேவில், பஹால்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று தீவிரவாதிகள் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அமித் ஷா

அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதம் என்ன என்று கேட்டு கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

ஆபரேஷன் மஹாதேவ்

மேலும், “இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் இணைந்து நடத்திய ஆபரேஷன் மஹாதேவில், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கும் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் மஹாதேவில், சுலேமான் என்ற பைசல், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்.

சுலேமான் லஷ்கர்-இ-தொய்பாவின் ஏ-பிரிவு தளபதியாகவும், ஆப்கான் லஷ்கர்-இ-தொய்பாவின் ஏ-பிரிவு தீவிரவாதியாகவும், ஜிப்ரானும் ஏ-தர தீவிரவாதியாகவும் இருந்தவர்கள் ஆவார்கள்.

பைசரன் பள்ளத்தாக்கில் நமது குடிமக்களைக் கொன்ற மூன்று தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.

அமித்ஷா
அமித்ஷா

அவர்களுக்கு உணவு வழங்கியவர்கள், உதவியர்வர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டவுடன், எங்களால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். திருமணமான 6 நாட்களுக்குப் பிறகு, விதவையான ஒரு பெண் என் முன் நிற்பதைக் கண்டேன் – அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

அடையாளம் காணப்பட்டது எப்படி?

தீவிரவாதிகளை அனுப்பியவர்களை மோடி ஜி செயலிழக்க செய்தார். இன்று நமது பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்களை கொலை கொன்றுள்ளனர் என்று இன்று அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.

நேற்று இறந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகரை கொண்டு வந்தப்போது, அவர்கள் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மூன்று பேர் என அடையாளம் காணப்பட்டனர்.

தீவிரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதோட்டாக்கள் குறித்து FSL அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது… நேற்று, மூன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, செய்யப்பட்ட FSL அறிக்கைகளுடன் அது பொருத்தின… நேற்று சண்டிகரில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் பிறகு, இந்த மூவரும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று அவர்கள் (காங்கிரஸ்) பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று எங்களிடம் கேட்டார்கள். நிச்சயமாக, நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அது எங்கள் பொறுப்பு.

நேற்று, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பினார் – பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும்போது, ‘அவர்கள் தவறே இல்லை’ என்று அவர்களுக்கு சர்ட்டிஃபிகேட்டை வழங்குகிறார் என்று அர்த்தம்.

அமித்ஷா
அமித்ஷா

ஆபரேஷன் சிந்தூர்… ஆபரேஷன் மஹாதேவ்!

ஆபரேஷன் சிந்தூர் தீவிரவாதிகளை அனுப்பியவர்களைக் கொன்றது… ஆபரேஷன் மஹாதேவ் தாக்குதல் நடத்தியவர்களைக் கொன்றது… இந்த செய்தியைக் கேட்ட பிறகு, ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சிகளிலும் மகிழ்ச்சியின் அலை பரவும் என்று நினைத்தேன். ஆனால் ‘அவர்களின் முகங்கள் கரி பூசப்பட்டதுப்போல ஆகிவிட்டது’… இது என்ன வகையான அரசியல்?” என்றார்.

(மேலும் விவரங்கள் இங்கு தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മാധ്യമസ്വാതന്ത്ര്യ സൂചികയില്‍ വീണ്ടും തിരിച്ചടി; 153ാം സ്ഥാനത്തുള്ള പാകിസ്ഥാനും പിന്നില്‍ ഇന്ത്യ

ന്യൂദല്‍ഹി: ലോക മാധ്യമസ്വാതന്ത്ര്യ സൂചികയില്‍ ഇന്ത്യക്ക് വീണ്ടും തിരിച്ചടി. റിപ്പോര്‍ട്ടേഴ്സ് വിത്തൗട്ട്...

திக் திக்… மூடில் திமுக தலைமை… ''என்னதான் ஆச்சு?!"

“தேர்தல் களம் என்றால் தி.மு.க-வினரை போல சுற்றி சுழன்று பணியாற்றுபவர்கள் இருக்க...

Pension Hike: పెన్షనర్లకు కేంద్రం శుభవార్త.. రూ. 7,500లకు పెరగనున్న కనీస పెన్షన్..?

రిటైర్మెంట్ తర్వాత గౌరవప్రదమైన జీవితాన్ని గడపడానికి పెన్షన్ అనేది ప్రధాన ఆధారం....

ಖರ್ಗೆ ಅವರೇ ಪಕ್ಷದ ಸುಪ್ರೀಂ: ರಾಜ್ಯದಲ್ಲಿ ಯಾವ ಬದಲಾವಣೆ ಇಲ್ಲ- ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ವಿಜಯಪುರ,ಮೇ1,2026 (www.justkannada.in): ಸದ್ಯಕ್ಕೆ ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ಇಲ್ಲ ಎಂಬ ಎಐಸಿಸಿ...