28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

Date:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தேக்கு, வேப்பமரம், வாகை உள்ளிட்ட மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

இந்த பூங்கா, சுற்றுப்புற மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அங்கிருக்கும் இயற்கை சூழலில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டுவந்தனர்.

பூங்கா

இந்நிலையில், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட மரங்களைக் கடந்த சில நாள்களுக்கு முன் இரவோடு இரவாக வெட்டி, சிலர் கடத்தியுள்ளனர். இதில் 4வது வார்டு திமுக கவுன்சிலர் வித்யாவின் கணவர் சுரேஷுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மறுநாள் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வெட்ட உரிய அனுமதி பெறப்படவில்லை எனவும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கடத்தியதாகவும், ஜோலார்பேட்டை நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியர், கவுன்சிலரின் கணவர் சுரேஷ் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, “மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறையிலும் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது . விசாரனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಪ್ರಚಾರದ ವೇಳೆ ಹೈಡ್ರಾಮಾ: ‘ಕೈ’ಶಾಸಕ ಪ್ರದೀಪ್ ಈಶ್ವರ್ ಗೆ ಚಪ್ಪಲಿ , ಪೊರಕೆ ಪ್ರದರ್ಶನ

ದಾವಣಗೆರೆ,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in):  ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ವಿಧಾನಸಭಾ ಉಪಚುನಾವಣಾ ಕಣ ರಂಗೇರಿದ್ದು...

ഇറാനിലെ കരയുദ്ധം അമേരിക്കയെ ചെളിക്കുണ്ടിലാക്കും; വിയറ്റ്നാം ആവര്‍ത്തിക്കുമെന്ന മുന്നറിയിപ്പുമായി റഷ്യ

മോസ്‌കോ: ഇറാനെതിരായ ഏതൊരാക്രമണത്തിന്റെയും വിധി പരാജയമായിരിക്കുമെന്ന് അമേരിക്കയ്ക്ക് മുന്നറിയിപ്പുമായി റഷ്യന്‍ സുരക്ഷാ...

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி...

India Receives Good News Amid Conflict: యుద్ధం మధ్యలో భారత్‌కు శుభవార్త..

India Receives Good News Amid Conflict: మధ్యప్రాచ్యంలో కొనసాగుతున్న యుద్ధ...