15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

'எங்கள் மீது சேற்றை அள்ளி வீசினாலும்…' – ட்ரம்ப், மோடிக்கு பரிந்து பேசும் இத்தாலி பிரதமர் மெலோனி!

Date:

அமெரிக்கா வாஷிங்டன்னில் நடந்த மாநாட்டில் (Conservative Political Action Conference (CAPC)) ஆன்லைனில் கலந்துகொண்டார் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி.

அந்த மாநாட்டில் மெலோனி, “அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றி இடதுசாரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வலதுசாரிகள் கைகோர்ப்பதால் இடதுசாரிகளின் கோபம் ஹிஸ்டிரியாவாக மாறி வருகிறது. 1990-களில் பில் கிளின்டனும் (முன்னாள் அமெரிக்க அதிபர்), டோனி பிளேயர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்) இணைந்து உலக அளவிலான இடதுசாரி விடுதலை நெட்வொர்க்கை உருவாக்கியப்போது, அவர்களை ‘அரசியல்வாதிகள்’ என்று கூறினார்கள்.

எங்கள் மீது சேற்றை அள்ளி வீசினாலும்…

ஆனால், இப்போது நான், ட்ரம்ப், ஜேவியர் மைலி (அர்ஜென்டீனா அதிபர்) அல்லது மோடி பேசினால், அது ‘ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்’ என்று கூறுகிறார்கள். இப்படி இடதுசாரிகள் இரண்டு நிலையாக பேசுவது எங்களுக்கு பழகிவிட்டது.

அனைத்திலும் நல்ல விஷயம் என்னவென்றால், என்ன தான் இவர்கள் எங்கள் மீது சேறு அள்ளி வீசினாலும், மக்கள் அவர்களை நம்பப்போவதில்லை என்பது நல்ல செய்தி.

நாங்கள் சுதந்திரத்தை பாதுகாக்கிறோம். நாங்கள் தேசத்தை நேசிக்கிறோம். பாதுகாப்பான எல்லைகள் எங்களுக்கு வேண்டும். இடதுசாரிகளிடம் இருந்து வர்த்தகத்தையும், குடிமக்களையும் நாங்கள் பாதுகாக்கிறோம். குடும்ப வாழ்க்கையை நாங்கள் பாதுகாக்கிறோம்” என்று பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯುದ್ದದ ವಿಚಾರದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಸುಳ್ಳು ಹೇಳಿಕೆ, ಜನರಲ್ಲಿ ಆತಂಕ ಉಂಟು ಮಾಡಿದೆ- ಪ್ರಧಾನಿ ಮೋದಿ

ಅಸ್ಸಾಂ, ಮಾರ್ಚ್, 14,2026 (www.justkannada.in):  ಯುದ್ದದ ವಿಚಾರದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಸುಳ್ಳು...

ഭരണാഘടനാ തടസ്സം; യുദ്ധകപ്പലുകള്‍ അയക്കാനാവില്ല; ട്രംപിനെ തള്ളി ജപ്പാന്‍

വാഷിങ്ടണ്‍: ഹോര്‍മുസ് കടലിടുക്കിന്റെ സുരക്ഷ ഉറപ്പാക്കാന്‍ ലോകരാഷ്ട്രങ്ങള്‍ സ്വന്തം യുദ്ധ കപ്പലുകള്‍...

''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்"- செல்வப்பெருந்தகை

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது....

LPG Crisis: వారికి కేంద్రం షాక్.. “నో బుకింగ్, సిలిండర్ సరెండల్ చేయాలి “..

LPG Crisis: ఇరాన్ యుద్ధం దేశంలో వంటగ్యాస్ (LPG) ఆందోళన్ని...