3
September, 2026

A News 365Times Venture

3
Thursday
September, 2026

A News 365Times Venture

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு:“அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது"- அரசு பதில்

Date:

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பாக 20 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், “அறிக்கையின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (ஆகஸ்ட் 31) நடந்தது.

இந்த விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது.” எனத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா?” என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അഭിഷേക് ബാനര്‍ജിയുടെ ഓഫീസ് കൊള്ളയടിച്ചു; ബി.ജെ.പിക്കെതിരെ ആരോപണവുമായി തൃണമൂല്‍

കൊല്‍ക്കത്ത: തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസ് ദേശീയ ജനറല്‍ സെക്രട്ടറി അഭിഷേക് ബാനര്‍ജിയുടെ കൊല്‍ക്കത്തയിലെ...

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை ஆந்திராவுக்கு மாற்ற முயற்சி; காய் நகர்த்துகிறாரா சந்திரபாபு?

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பிரபல 'HD Hyundai' நிறுவனத்தின் பிரமாண்ட...

Pakistan: శతాబ్ధం నాటి హిందూ ఆలయం కూల్చివేత.. పాక్‌పై భారత్ ఆగ్రహం..

Pakistan:  పాకిస్తాన్‌లోని నరోవాల్ జిల్లాలోని సిరాజ్ గ్రామంలో శతాబ్ధానికి పైబడిన పురాతన...

ചാറ്റ് ജി.പി.ടിക്കും യൂറോപ്യന്‍ യൂണിയന്റെ പൂട്ട്; ഡിജിറ്റല്‍ സര്‍വീസ് ആക്ടിന്റെ പരിധിയില്‍ ഉള്‍പ്പെടുത്തി

ബ്രസല്‍സ്: യൂറോപ്യന്‍ യൂണിയന്റെ കര്‍ശന ഡിജിറ്റല്‍ നിയന്ത്രണങ്ങളുടെ പരിധിയിലേക്ക് ചാറ്റ് ജി.പി.ടിയും....