27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன?

Date:

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார்.

இதன் பிறகு, அவருடைய மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் அடுத்த உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுவெளியில் காணப்படவில்லை

மொஜ்தபா காமேனி உச்சத் தலைவரான பின், ஒருமுறைக்கூட பொதுவெளியில் காணப்படவில்லை.

அவருடைய தந்தை இறந்த தாக்குதலில், இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் பொதுவெளியில் காணப்படாததற்கு முதலில் காரணம் கூறப்பட்டது.

ஈரான் – மொஜ்தபா ஹொசைனி கமேனி

சந்தேகம்

பின்னர் அவருடைய பாதுகாப்பிற்காக பொதுவெளியில் அவர் வரவில்லை என்று சொல்லப்பட்டது.

அவருடைய தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதி ஊர்வலத்தில் கூட, மொஜ்தபா காமேனி கலந்துகொள்ளவில்லை.

ஏற்கெனவே ‘மொஜ்தபா காமேனி உண்மையில் உயிருடன்தான் இருக்கிறாரா’ என்று இருந்துவந்த கேள்வி இன்னும் வலுத்தது.

இந்தச் சந்தேகத்திற்குப் பதிலளிப்பதுபோல, ஈரான் அவருடைய வீடியோ கிளிப் ஒன்றைப் பகிர்ந்திருந்தது.

ட்ரம்ப் பதில்

நேற்றைய (ஆகஸ்ட் 26) நேர்காணல் ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் மொஜ்தபா காமேனி உயிருடன் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ட்ரம்ப், “மொஜ்தபா காமேனி இறந்துவிட்டாரென நான் நினைக்கவில்லை.

அவரது உடலின் இடது பக்கம், கை, கால் என அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது உண்மைதான்.

ஆனாலும், அவர் இறந்துவிட்டார் என்று தோன்றவில்லை.

ஒருவேளை அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரென்றால், ஈரான் மிகச்சிறப்பாக நாடகமாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸದನದಲ್ಲಿ ವಿಪಕ್ಷಗಳ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲಾಗದೆ ಕಾಂಗ್ರೆಸ್ ಪಲಾಯಾನ-ಆರ್.ಅಶೋಕ್

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,25,2026 (www.justkannada.in):  ಅಧಿವೇಶನದಲ್ಲಿ ವಿಪಕ್ಷಗಳ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲಾಗದೆ ಸದನವನ್ನ ಬಂದ್...

മിന്നല്‍ പ്രളയത്തില്‍ വിറങ്ങലിച്ച് നേപ്പാള്‍; മരണം 160 ആയി: 133 ഇന്ത്യക്കാരുള്‍പ്പെടെ 750 ലധിം പേരെ കാണാനില്ല

കാഠ്മണ്ഡു: നേപ്പാളിലുണ്ടായ മിന്നല്‍ പ്രളയത്തില്‍ മരണ സംഖ്യ ഉയര്‍ന്നു. 160 ഓളം...

Off The Record: తగ్గేదిలేదు.. స్థానిక సమరంలో జనసేన సరికొత్త వ్యూహం..!

Off The Record: ఏపీలో స్థానిక ఎన్నికల కోసం రాజకీయ పార్టీలు...

ರಾಯಚೂರು ಐ.ಐ.ಐ.ಟಿಯಲ್ಲಿ 12 ಕೋಟಿ ರೂ. ವೆಚ್ಚದಲ್ಲಿ AI ಉತ್ಕೃಷ್ಟತಾ ಕೇಂದ್ರ ಸ್ಥಾಪನೆ-ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,26,2026 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಪರಿಪೂರ್ಣ ಕೈಗಾರಿಕಾ ಬೆಳವಣಿಗೆ ಸಾಧಿಸಲು ಸರಕಾರ...