16
February, 2026

A News 365Times Venture

16
Monday
February, 2026

A News 365Times Venture

தொகுதி பங்கீடு: "மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்" – கொதிக்கும் மாணிக்கம் தாகூர்

Date:

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

மாணிக்கம் தாகூர்

மேலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், “உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன.

மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்.

காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

60 വയസിന് മുകളിലുള്ളവര്‍ക്കും ആനുകൂല്യങ്ങള്‍ നല്‍കണം; നിര്‍ദേശങ്ങള്‍ സമര്‍പ്പിച്ച് ഗിഗ് തൊഴിലാളി യൂണിയന്‍

ന്യൂദല്‍ഹി: ഗിഗ്, പ്ലാറ്റ്‌ഫോം തൊഴിലാളികള്ക്കായി സാമൂഹിക സുരക്ഷാ കോഡിന് കീഴില്‍ തയ്യാറാക്കിയ...

பட்டுக்கோட்டை: உதயநிதி கலந்துகொண்ட திருமணம்; போன் செய்த கே.என்.நேரு? அகற்றப்பட்ட பேனர்களால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழஞ்சூர்...

Man Climbs Electricity Tower: నీ ప్రేమ చల్లగుండా.. భార్య తనవెంట రాననడంతో ఏకంగా?

Man Climbs Electricity Tower: ఉత్తరప్రదేశ్ రాష్టంలోని సోనభద్ర జిల్లాలో ఓ...

താരിഖ് റഹ്‌മാന്റെ സത്യപ്രതിജ്ഞ; തിരക്കിലാണെന്ന് മോദി; ഇന്ത്യയെ പ്രതിനിധീകരിച്ച് പങ്കെടുക്കാന്‍ ഓം ബിര്‍ള

ന്യൂദല്‍ഹി: ബംഗ്ലാദേശിലെ പൊതുതെരഞ്ഞെടുപ്പില്‍ വിജയം നേടിയ ബി.എന്‍.പി സര്‍ക്കാരിന്റെ സത്യപ്രതിജ്ഞാ ചടങ്ങില്‍...