27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

“ரஷ்யாவின் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லையா?'' – நிருபரிடம் கொந்தளித்த ட்ரம்ப்

Date:

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது.

பிற நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஆனாலும், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தால், ரஷ்யா உக்ரைன் போரைத் தொடர்ந்து வருகிறது என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டு.

இதனால், சீனாவைத் தவிர்த்து, இந்தியா மற்றும் பிரேசில் மீது ட்ரம்ப் கூடுதல் 25 சதவீத வரியை விதித்துள்ளார்.

ட்ரம்ப் – போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி

பத்திரிகையாளர் கேள்வி

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் மற்றும் போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, போலந்து பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம், “புதினின் குறித்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துகிறீர்கள். பிறகு ஏன் ரஷ்யாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?” என்கிற கேள்வியை முன்வைத்தார்.

ட்ரம்ப் பதில்

அதற்கு ட்ரம்ப் பதிலளித்தார்:

“எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? சீனாவிற்கு அடுத்து, ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏறத்தாழ சமமாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா மீது இரண்டாம் நிலை வரி விதித்தது நடவடிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா?

ரஷ்யா - இந்தியா உறவு
ரஷ்யா – இந்தியா உறவு

இதனால் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அது நடவடிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா?

நான் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும்போது, நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேட வேண்டும் என்று நினைக்கிறேன்” என அவர் கூறி பொறிந்து தள்ளியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರಾಯಚೂರು ಐ.ಐ.ಐ.ಟಿಯಲ್ಲಿ 12 ಕೋಟಿ ರೂ. ವೆಚ್ಚದಲ್ಲಿ AI ಉತ್ಕೃಷ್ಟತಾ ಕೇಂದ್ರ ಸ್ಥಾಪನೆ-ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,26,2026 (www.justkannada.in):  ರಾಜ್ಯದಲ್ಲಿ ಪರಿಪೂರ್ಣ ಕೈಗಾರಿಕಾ ಬೆಳವಣಿಗೆ ಸಾಧಿಸಲು ಸರಕಾರ...

മാഡിസണ്‍ സ്‌ക്വയറില്‍ ആര്‍.എസ്.എസ് വേണ്ട; ന്യൂയോര്‍ക്കിൽ 48 സംഘടനകളുടെ സംയുക്ത യോഗം

ന്യൂയോര്‍ക്ക്: ന്യൂയോര്‍ക്കില്‍ ആര്‍.എസ്.എസ് തലവന്‍ മോഹന്‍ ഭാഗവത് പങ്കെടുക്കുന്ന പരിപാടി നിര്‍ത്തിവയ്ക്കണമെന്ന്...

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய...

Nepal Floods: నేపాల్ వరదలపై తెలంగాణ ప్రభుత్వం అలర్ట్.. సీఎం రేవంత్‌ ఆదేశాలతో ప్రత్యేక హెల్ప్‌లైన్ ఏర్పాటు

Nepal Floods: నేపాల్‌లో వరదలకు సంబంధించిన దృశ్యాలు చూస్తేనే షాక్‌ అయ్యే...