12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

RG Kar Rape Case: 'தூக்கு தண்டனை வேண்டாம்' – குற்றவாளி குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்

Date:

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தில் கைதான சஞ்சய் ராய்யை குற்றவாளி என கடந்த வாரம் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மேற்கு வங்க அரசு மற்றும் சி.பி.ஐ, சஞ்சய் ராயிற்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டது.

இதுக்குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர்களிடம் கேட்கும்போது, “இப்போதைக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வேண்டாம்” என்று அவர்களது தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதுவே பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்களின் விருப்பம் என்றும் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஷமீம் அகமத் கூறியுள்ளார்.

RG Kar Rape Case: தூக்கு தண்டனை வேண்டாம்!

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட கொல்கத்தா நீதிமன்றம், தனது தீர்ப்பை அறிவிக்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதுக்குறித்து பயிற்சி மருத்துவரின் பெற்றோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இப்போதைக்கு குற்றவாளியை தூக்கிலிடக்கூடாது. ஒருவேளை இப்போது தூக்கிலிடப்பட்டால், எப்படி சரியான விசாரணை நடக்கும்… எப்படி அது சம்பந்தமான ஆதாரங்கள் கிடைக்கும்?’ என்று பேசினார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

LPG ಸಿಲಿಂಡರ್ ಕೊರತೆ: ವಿಧಾನಸಭೆಯಲ್ಲಿ ಪ್ರತಿಧ್ವನಿ, ವಾಕ್ಸಮರ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಲ್ಲಿ ಯುದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಕರ್ನಾಟಕ ಸೇರಿ ದೇಶದ...

പ്രധാനമന്ത്രിയെ വിമര്‍ശിക്കുന്ന സോഷ്യല്‍ മീഡിയ പോസ്റ്റുകള്‍ക്ക് പൂട്ട്; ഉത്തരവിട്ട് കേന്ദ്രം

ന്യൂദല്‍ഹി: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയെയോ സര്‍ക്കാരിനെയോ വിമര്‍ശിക്കുന്നതോ പരിഹസിക്കുന്നതോ ആയ സോഷ്യല്‍ മീഡിയ...

திருச்சி: "விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது தான் தி.மு.க!" – பிரதமர் மோடி காட்டம்

தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி....