7
April, 2026

A News 365Times Venture

7
Tuesday
April, 2026

A News 365Times Venture

"ஈரானை கைப்பற்ற ஒரே இரவு தான் தேவை; அது நாளையாக கூட இருக்கலாம்" – ட்ரம்ப் எச்சரிக்கை

Date:

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துக் கொண்டே வருகிறார்.

நேற்று முழுவதும் ட்ரம்ப் ஈரானுக்கு பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அவை என்னென்ன?

> ஒரே இரவில் மொத்த நாட்டையும் (ஈரான்) கைப்பற்றிவிட முடியும். அது நாளை இரவாகக் கூட இருக்கலாம்.

> ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் அழிப்பைத் தாண்டி, இன்னும் கடுமையான பிளான்கள் கூட ஈரானுக்கு எதிராக உள்ளன.

> பல நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த, 45 நாள்கள் தற்காலிக போர் நிறுத்தம் குறித்து பேசுகின்றனர். இது முக்கியமான நகர்வு தான். ஆனால், இது மட்டும் போதாது.

ஈரான் போர்

> போர் நிறுத்தம் வேண்டுமா… இல்லையா என்பதை நான் ஒருவன் மட்டுமே முடிவு செய்வேன்.

> எனக்கு ஈரான் எண்ணெயை கைப்பற்ற வேண்டும் என்பது ஆசை. ஆனால், அமெரிக்க மக்களுக்கு அது வேண்டுமா என்பது தெரியவில்லை.

அவர்களுக்கு அமெரிக்கா அந்த நாட்டிற்குள் செல்ல வேண்டும். வேண்டியதை செய்துவிட்டு, வெளியேறிவிட வேண்டும். அவ்வளவு தான்.

ட்ரம்ப் குறித்திருக்கும் இரவு அமெரிக்க நேரப்படி இன்று இரவு தான். என்ன நடக்கிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ರಾತ್ರಿ ಸಂಚಾರ ನಿಷೇಧ ತೆರವಿಗೆ ಮಾರ್ಗ- ಪ್ರಿಯಾಂಕಾ ಗಾಂಧಿ ಭರವಸೆ

ವಯನಾಡು,ಏಪ್ರಿಲ್,7,2026 (www.justkannada.in): ಕೇರಳ–ಕರ್ನಾಟಕ ಅರಣ್ಯ ಪ್ರದೇಶದ ಮಧ್ಯೆ ಜಾರಿಯಲ್ಲಿರುವ ರಾತ್ರಿ...

சாத்தான்குளம் வழக்கு: ”பிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- ஹென்றி திபேன் கேள்வி

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என...