3
March, 2026

A News 365Times Venture

3
Tuesday
March, 2026

A News 365Times Venture

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! – என்ன செய்யப் போகிறது திமுக?

Date:

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப்போகிறது?

அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு

தமிழகத்தில் காலியாகப் போகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு நான்கு இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

திமுக தரப்பில் காங்கிரஸூக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உறுதி செய்தார்.

ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானால் மட்டுமே காங்கிரஸூக்கு திமுக அந்த ராஜ்ய சபா சீட்டை கொடுக்கும். மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், மார்ச் 3, அதாவது நாளைக்குள் கூட்டணி குறித்து உறுதியான முடிவை கூறுமாறு அறிவாலயம் தரப்பில் காங்கிரஸூக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் குழு
காங்கிரஸ் குழு

ஆனால், இப்போது வரைக்கும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்ததைப் போன்றே தெரியவில்லை. ‘கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது’ என அறிவாலயத்தில் வைத்து செல்வப்பெருந்தகை பேசினாலும், டெல்லி சென்று ’25 இடங்களுக்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது’ என சோடங்கர் பேசுகிறார்.

27 அல்லது 28 இடங்கள் வரைக்கும் கொடுக்க திமுக முன்வருமென தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது காங்கிரஸூக்குமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலுமே கடைசி நிமிடம் வரை டிமாண்ட் ஏற்றி பேரம் பேசும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ்.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay – தவெக விஜய்

இந்நிலையில், திடீரென இன்று காலை முதல் ஹைதராபாத்தில்ல் ராகுல் காந்தியை சந்தித்து ஆதவ் அர்ஜூனா கூட்டணி குறித்து பேசி வருவதாக செய்தி சேனல்களில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆதவ் தரப்பில் விசாரிக்கையில் இதை முழுமையாக மறுக்கின்றனர். ஆனால், ‘காங்கிரஸ் வந்தால் மகிழ்வுடன் வரவேற்போம்…’ என்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் முன்பாக இப்போது 2 ஆப்சன்கள் இருக்கிறது. ஒன்று, திமுகவின் டெட்லைனுக்குள் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு ராஜ்யசபா சீட்டை வாங்க வேண்டும் அல்லது ராஜ்ய சபா சீட்டை தியாகம் செய்து கூடுதல் சீட்டுகளுக்காக இன்னும் முரண்டு பிடித்து பார்க்கலாம்.

அறிவாலயம் விதித்த டெட்லைன் முடியப்போகிறது. காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது?

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಒಮನ್ ನಲ್ಲಿ ತೈಲ ಟ್ಯಾಂಕರ್‌ ಮೇಲೆ ದಾಳಿ; ಓರ್ವ ಭಾರತೀಯ ಸಾವು

ನವದೆಹಲಿ,ಮಾರ್ಚ್,2,2026 (www.justkannada.in): ಇಸ್ರೇಲ್‌-ಅಮೆರಿಕದ ಜಂಟಿ ದಾಳಿ ನಡೆಸುತ್ತಿರುವ ಪರಿಣಾಮ ಇರಾನ್‌...

സംഘര്‍ഷം വ്യാപിക്കുന്നതില്‍ ആശങ്ക; വെടിനിര്‍ത്തലിന് ആഹ്വാനം ചെയ്ത് സൗദി, യു.എ.ഇ ഭരണാധികാരികളുമായി സംസാരിച്ച് പുടിന്‍

ക്രെംലിന്‍: പശ്ചിമേഷ്യയിലെ ഗുരുതര സാഹചര്യങ്ങള്‍ പരിഹരിക്കാന്‍ ചര്‍ച്ചയ്ക്ക് ആഹ്വാനം ചെയ്ത് റഷ്യന്‍...

Strait of Hormuz: హర్మూజ్‌ జలసంధిని మూసేసిన ఇరాన్.. ఆయిల్ ధరలు స్కైరాకెట్.. ఈ జలసంధి ఎందుకు ముఖ్యం?

ఇరాన్ ఇస్లామిక్ రెవల్యూషనరీ గార్డ్ కార్ప్స్ (IRGC) హార్ముజ్ జలసంధి ద్వారా...

ಇ-ಸ್ವತ್ತು 2.0 ತಂತ್ರಾಂಶದಡಿ ಈವರೆಗೆ 1,14,907 ಅರ್ಜಿಗಳ ಅನುಮೋದನೆ, ವಿಲೇವಾರಿ- ಸಚಿವ ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,2,2026 (www.justkannada.in): ಇ-ಸ್ವತ್ತು 2.0 ತಂತ್ರಾಂಶದಡಿ ಈವರೆಗೆ ರಾಜ್ಯದಲ್ಲಿ 1,14,907...