28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

முல்லை பெரியாறு: “வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்'' விவசாயிகள் கண்டனம்

Date:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் ‘கேரள அரசின் சதி’ என்று பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் கூறியதோடு அதற்கு கண்டனம் தெரிவித்து, கம்பத்தில் உள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதி யாரும் நுழைய முடியாத புலிகள் காப்பகப் பகுதி. இந்தப் பகுதிக்குள் எவ்வாறு வெடிகுண்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று சிந்திக்காமல் கேரள அரசு அணையைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதற்காகவே இவ்வாறு புரளியைக் கிளப்பி உள்ளது.

இது முழுக்க முழுக்க கேரள அரசின் சதி செயல். தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைக் குடிக்கும் 5 மாவட்டங்களில், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் இதுவரை முல்லைப் பெரியாறு அணைக்காக நாடாளுமன்றத்தில் பேசியதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்படுகிறது.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள காவலர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 26 ஆம் தேதி கம்பத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்கின்றனர்” என்று அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ನಾಳೆಯಿಂದ IPL:  ಅಧಿಕಾರಿಗಳ ಜೊತೆ ಸಿಎಸ್ ಸುದೀರ್ಘ ಸಭೆ, ಸಲಹೆ ಸೂಚನೆ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,27,2026 (www.justkannada.in): ನಾಳೆಯಿಂದ IPL ಪಂದ್ಯಾವಳಿಗಳು ಆರಂಭವಾಗಲಿರುವ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ರಾಜ್ಯ...

‘ടീം ഇന്ത്യയായി ഒത്തൊരുമിച്ച് പ്രവര്‍ത്തിക്കണം’; പശ്ചിമേഷ്യന്‍ സംഘര്‍ഷത്തില്‍ മുഖ്യമന്ത്രിമാരുടെ യോഗം വിളിച്ച് പ്രധാനമന്ത്രി

ന്യൂദല്‍ഹി: പശ്ചിമേഷ്യന്‍ സംഘര്‍ഷത്തിന്റ സാഹചര്യത്തില്‍ രാജ്യത്തെ എല്ലാ സംസ്ഥാനങ്ങളിലെയും കേന്ദ്ര ഭരണപ്രദേശങ്ങളിലെയും...

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' – விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார்....

Heart Touching Story : చనిపోయినా విడిపోలేదు.. విగ్రహాలు కట్టి ప్రతి ఏడాది పెళ్లి చేస్తున్న తల్లిదండ్రులు.!

ప్రేమకు చావు లేదని చాటిచెప్పే ఉదంతాలు అప్పుడప్పుడు మనల్ని ఆశ్చర్యపరుస్తుంటాయి. మహబూబాబాద్...