29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக்குளிக்க முயற்சி!

Date:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்துள்ள கல்லத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெப்ப சலனம் காரணமாக பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதி வன கட்டுப்பாட்டில் இருக்க கூடிய நிலையில் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களான மான்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது என இந்த மின் ஆலை அமைப்பதற்கு தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தீக்குளிக்க முயற்சித்தவர்

அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதி மக்களைக் கண்டு கொள்ளாமல் ஒடுக்குமுறை செய்து தங்களை மறைமுகமாக இடம்பெறச் செய்யும் நோக்கத்தில் செயல்படுவதாக கூறி காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஐந்து பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மனுவை பெற்ற ஆட்சியர் கமல் கிஷோர் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை எனவும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென 8 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் பூட்டப்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ʼಮುಖ್ಯಮಂತ್ರಿ ಪದಕʼ ಪ್ರಕಟ: ಮೈಸೂರಿನ ನಾಲ್ವರು ಸೇರಿ ರಾಜ್ಯದ 153 ಪೊಲೀಸರಿಗೆ ಗೌರವ

  ಬೆಂಗಳೂರು, ಮಾ.೨೮,೨೦೨೬ : 2025ನೇ ಸಾಲಿನ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಪದಕ (CM...

ആശങ്ക കുറയുന്നു; രണ്ട് ഇന്ത്യന്‍ എല്‍.പി.ജി കപ്പലുകള്‍ ഹോര്‍മുസ് കടലിടുക്ക് കടന്നു

ന്യൂദല്‍ഹി: ഹോര്‍മുസ് കടലിടുക്കിലൂടെയുള്ള ഗതാഗതം പൂര്‍ണമായും നിരോധിച്ചെന്ന റിപ്പോര്‍ട്ടുകള്‍ ആശങ്കയാകുന്നതിനിടെ രണ്ട്...

"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" – கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ் ; கப்சிப் நயினார்

அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி...

Viral Video: సీఎం బుగ్గపై ముద్దు పెట్టిన మహిళ.. నెట్టింట వీడియో వైరల్..

అసోం ముఖ్యమంత్రి హిమంత బిశ్వ శర్మ ఎన్నికల ప్రచారంలో జరిగిన ఒక...