23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

Operation Sindoor: `இந்தியா தனக்கிருந்த உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது’ – விளக்கும் பாதுகாப்புத்துறை|Live

Date:

`இந்தியா தனக்கிருந்த உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது’

தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “ஏப்ரல் 25 அன்று, ஊடக செய்தி வெளியிட்டிலிருந்து TRF பற்றிய குறிப்பை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதுவும் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தானின் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா தனக்கிருந்த உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறது. பஹல்காம் தாக்குதலை நடத்தியவர்களையும், அதற்கு திட்டமிட்டவர்களையும் எங்கள் உளவுத்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் திட்டமிட்டு, சரியானளவில் பதிலடிகள் கொடுக்கப்பட்டன.

இந்தியாவிற்கு எதிராக மேலும் தாக்குதல்கள் வரவிருப்பதாக எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியது. எனவே, அதைத் தடுக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதனால் இன்று காலை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கத்தோடு இந்தியாவும் பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தியது.” என்றார்.

ஆபரேஷன் சிந்தூர்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் எனும் சுற்றுலா தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திரும்ப அனுப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

Operation Sindoor
Operation Sindoor

அதே நேரம், இரு நாட்டின் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுமையான வார்த்தைப்போர் நடந்தது. இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் , பாகிஸ்தானின் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதக் குழுக்களில் தலைமையகங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

விளக்கும் மத்திய அரசு:

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு துறையின் சார்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமானர் வியோம்கா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது. லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதுதான் பஹல்காம் தாக்குதல். குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.”

தாக்குதல் நடத்தியதை பிரதமர் மோடியிடம் தெரிவிக்குமாறு தீவிரவாதிகள் கூறியிருக்கின்றனர். பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித் தனமானது. இந்தத் தாக்குதல் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்தத் தாக்குதலுக்கு the Resistance Front என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புகள் இதன் மூலம் நிறுவப்பட்டன.” எனத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಸಿಎಂ  ಪತ್ರಕ್ಕೆ ಸ್ಪಂದನೆ: ಹೆಚ್ಚುವರಿ 20% ಸಿಲಿಂಡರ್  ಪೂರೈಕೆಗೆ ಕೇಂದ್ರ ಒಪ್ಪಿಗೆ – ಸಚಿವ ಕೆ.ಎಚ್ ಮುನಿಯಪ್ಪ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್, 23,2026 (www.justkannada.in): ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಬರೆದ 2ನೇ ಪತ್ರಕ್ಕೆ...

യു.എസ് അധിനിവേശത്തെ പ്രതിരോധിക്കാന്‍ ക്യൂബ സജ്ജം; ലോകസാഹചര്യങ്ങള്‍ അവഗണിക്കുന്നത് നിഷ്‌കളങ്കതയെന്ന് വിദേശകാര്യമന്ത്രി

ഹവാന: അമേരിക്കയില്‍ നിന്നുള്ള ഏത് സൈനിക ആക്രമണങ്ങളെയും നേരിടാന്‍ സജ്ജമാണെന്ന് ക്യൂബ....

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! – திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

LPG crisis India: వంటగ్యాస్‌లో కొత్త మార్పు.. ఇకపై, 14.2 కేజీల సిలిండర్‌కు బదులుగా, 10 కేజీల సిలిండర్!

మధ్యప్రాచ్య సంక్షోభం, తరిగిపోయిన దేశీయ నిల్వలు, తగ్గిన దిగుమతుల కారణంగా, ప్రభుత్వ...